வெறுமையே உனை
காதல் செய்கிறேன்
தனிமையில்
தனிமையில்
தியானம் கொள்கிறேன்
பாதியாய் ஜீவன்
கரைந்து போகிறேன்
பாவியாய் எனை நான்
பாவியாய் எனை நான்
உணர்ந்து கொள்கிறேன்…!!
மேகமாய் நான்
கலைந்து போகிறேன்
மேனியை தீயில்
மேனியை தீயில்
கரைக்கப் போகிறேன்
நா வறண்டு
சாகபோகிறேன்
எனை நானே வரைந்து
எனை நானே வரைந்து
கசக்கி எறிகிறேன்….!!
நான் யாரென்று
மறந்து போகிறேன்
மறு வாழ்வொன்று இனி வேண்டாம்
மறு வாழ்வொன்று இனி வேண்டாம்
முற்றுப்புள்ளியில் எனை நானே
முடித்துக்கொள்கிறேன்..!!!
இனி
மெளனமாய் கடந்து போகிறேன்
மரணம் மறந்து உறவை துறந்து
தனிமையாய் நகரபோகிறேன்…!!
மெளனமாய் கடந்து போகிறேன்
மரணம் மறந்து உறவை துறந்து
தனிமையாய் நகரபோகிறேன்…!!
-பிசாசு-