Wednesday, November 2, 2016

நீ இல்லாத நாட்கள்

நீ இல்லாத நாட்கள்
வாசமில்லா பூக்களாய் என் நந்தவனம்..!!!
வெளிச்சமற்ற விண்மீன்களின்
ஊர்வலமாய் எந்தன் வானம்..!!!


நீ இல்லாத நாட்கள்
உறங்காத கண்களாய் என் இரவுகள்
முடியாத கதைகளாய் 
எந்தன் கனவுகள்..!!!



நீ இல்லாத நாட்கள்
தந்தியறுந்த வீணையாய் என் நகர்வுகள்..!!!
பொருளற்ற பக்கங்களாய்
எந்தன் உறவுகள்..!!!



நீ இல்லாத நாட்கள்...
பூக்காத செடியாய் என் கவிதை..!!!
பதிக்காத தடங்களாய் 
எந்தன் பாதை..!!!


நீ இல்லாத நாட்கள்...
எழுதாத எழுத்துக்களாய் என் பேனா..!!!
மூடிய பக்கங்களாய் 
எந்தன் புத்தகங்கள்..!!!



சகியே..!!!
நான் இல்லாத உன்னையும்
நீ இல்லாத என்னையும்
நாம் என்று சேர்வதை
கண்டேன் நீ இல்லாத நாட்களில்..!!!
-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...