நீயே கிடைக்க பெறுகிறாய்
எது தொலைந்து போனாலும்
உன்னாலேயே களவாடப்படுகிறது
உன்னாலேயே களவாடப்படுகிறது
எவை மறக்கப்படுகிறதோ
அவைள் அணைத்தும்
அவைள் அணைத்தும்
நீயாகிறாய்
பின் என்னதான் செய்வது
உன்னை காதலிப்பதை தவிற..!!!
பின் என்னதான் செய்வது
உன்னை காதலிப்பதை தவிற..!!!
******************************************************************
பறவை போல
உன்னை தேடுகின்றேன்
வனமெல்லாம்
எங்காவது உன் வாசத்தின்
சாயலில் நான் விழ்ந்து கிடக்கின்றேனா
என்று தேடிபார்த்து..!!!
******************************************************************
ஆயிரம் முறை சொன்னாலும்
அறிவே இல்லை உனக்கு என்று
முத்தமிடுகின்ற போதெல்லாம்
யுத்தமிடுகின்றாய் என்னோடு..!!!
சளைக்காமல் எச்சிலை துடைத்து
சத்தமில்லாமல் உன் கன்னம்
காட்டுகின்றாய் மீண்டுமொரு முத்தத்துக்காய்..!!!
இம்சையே..!!!
சத்ததிற்காக யுத்தமிடுகிறாயா..???
இல்லை இதழ்
முத்ததிற்காக சத்தமிடுகிறாயா..???
****************************************************************
என் சுவாச சுவரெங்கும்
சித்திரமாய் உன்னை சித்தரிப்பேன்...!!!
வானவில்லின்
வண்ணங்கொண்டு
உனக்கு சேலை செய்யவேன்..!!!
உன் பேரழகில்
வானவில் காண
சாரல் மழையாயிருப்பேன்..!!!
மேகத்தால் உனக்கொரு
மெத்தையிட்டு
மழை மேகமாய் உனை நனைத்து
பெண் வாசனை நுகர்வேன்..!!!
உன் உடல் மட்டும் அணைக்காது
உயிரையும் சேர்த்தணைப்பேன்
அவிழ்க்கும்போது மட்டுமில்லாமல்
நீ அணியும் போதும் அருகிலிருப்பேன்
****************************************************************
முத்தத்தோடு
கொஞ்சம் சத்தம் சேர்த்தேன்
நீ வெட்கம் கொள்ளும்
அழகை ரசிக்க..!!!
வெட்கத்தோடு
முத்தத்தையும்
நீ பரிசளித்தாய்- வேடிக்கையில்
நான் வியர்த்து நிற்க..!!!
காதல் மட்டுமில்லையடி
காமமும் கூட கூடிபோய் கிடக்கின்றது
நீ என்னவள் எனக்கானவள் என்பதால்..!!!
-பிசாசு-
காதல், புரியாத புதிர் என்பதில் அதிசயமில்லை.
ReplyDeleteஉங்கள் கவிதைகளுக்க நான் மிகப் பெரிய ரசிகை
ReplyDelete