Friday, November 11, 2016

அவளும் நானும் காதலும்

எதை இழ‌ந்து தேடினாலும்
நீயே கிடைக்க‌ பெறுகிறாய்
எது தொலைந்து போனாலும்
உன்னாலேயே க‌ள‌வாட‌ப்ப‌டுகிற‌து
எவை ம‌ற‌க்க‌ப்ப‌டுகிற‌தோ
அவைள் அணைத்தும் 
நீயாகிறாய்

பின் என்ன‌தான் செய்வ‌து
உன்னை காதலிப்பதை தவிற..!!!
******************************************************************

இற‌கு தொலைத்த‌
ப‌ற‌வை போல‌
உன்னை தேடுகின்றேன்
வ‌ன‌மெல்லாம்

எங்காவ‌து உன் வாச‌த்தின்
சாய‌லில் நான் விழ்ந்து கிட‌க்கின்றேனா
என்று தேடிபார்த்து..!!!

******************************************************************


ஆயிர‌ம் முறை சொன்னாலும்
அறிவே இல்லை உன‌க்கு என்று
முத்த‌மிடுகின்ற போதெல்லாம்
யுத்த‌மிடுகின்றாய் என்னோடு..!!!

ச‌ளைக்காம‌ல் எச்சிலை துடைத்து
ச‌த்த‌மில்லாம‌ல் உன் க‌ன்ன‌ம்
காட்டுகின்றாய் மீண்டுமொரு முத்தத்துக்காய்..!!!

இம்சையே..!!!
ச‌த்த‌திற்காக‌ யுத்த‌மிடுகிறாயா..???
இல்லை இதழ்
முத்த‌திற்காக‌ ச‌த்த‌மிடுகிறாயா..???


****************************************************************


என் சுவாச சுவரெங்கும்
சித்திரமாய் உன்னை சித்தரிப்பேன்...!!!

வானவில்லின்
வண்ணங்கொண்டு
உனக்கு சேலை செய்யவேன்..!!!

உன் பேரழகில்
வானவில் காண
சாரல் மழையாயிருப்பேன்..!!!

மேகத்தால் உனக்கொரு
மெத்தையிட்டு
மழை மேகமாய் உனை நனைத்து
பெண் வாசனை நுகர்வேன்..!!!

உன் உடல் மட்டும் அணைக்காது
உயிரையும் சேர்த்தணைப்பேன்

அவிழ்க்கும்போது மட்டுமில்லாமல்
நீ அணியும் போதும் அருகிலிருப்பேன்

****************************************************************

முத்தத்தோடு 
கொஞ்சம் சத்தம் சேர்த்தேன்
நீ வெட்கம் கொள்ளும்
அழகை ரசிக்க..!!!

வெட்கத்தோடு 
முத்தத்தையும் 
நீ பரிசளித்தாய்- வேடிக்கையில்
நான் வியர்த்து நிற்க..!!!

காதல் மட்டுமில்லையடி
காமமும் கூட கூடிபோய் கிடக்கின்றது
நீ என்னவள் எனக்கானவள் என்பதால்..!!!
-பிசாசு-





2 comments:

  1. காதல், புரியாத புதிர் என்பதில் அதிசயமில்லை.

    ReplyDelete
  2. உங்கள் கவிதைகளுக்க நான் மிகப் பெரிய ரசிகை

    ReplyDelete

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...