Friday, April 23, 2021

அவர் அவர் கையில்..!!

கிழிந்த ஆடைகளோடு
கருகிப்போன மேனியாய்
துவண்டுபோன முகத்துடன்
ஒரு ஓரமாய் அமர்ந்தங்கு
புலம்பிக்கொண்டிருக்கின்றான்
 
வறுமையென்று
வாய்பேசிக்கொண்டிருக்கின்றான்
அந்த வாலிபன்..!!
 
முறையான கல்வியில்லை
தொழிலொன்றும் கற்கவில்லை
அரசாங்கமென்ன
அரசியல்வாதிகளும் கூட
கண்டுக்கொள்ளவி்ல்லையென
விரல் நீட்டி காட்டுகிறான்...!!
 
அப்பன் சொத்து சேர்க்கவில்லை
சொந்தங்கள் ஏதும் உதவிடவில்லை
 

வந்தவள் வரன்கொண்டுவரவில்லை
பிறந்தவளும் கூட லெச்சுமியாயில்லை
என்றெல்லாம் குற்றங்கள் சுமத்துகின்றான்..!!
 
பசித்த வயிறுக்காய்
தான் சுவைத்த உயிருக்காய்
ரசித்த குழந்தைக்காய்
மனம் இறங்கி மானம் துறந்து
கையேந்தி நிற்கின்றேன் என்று
கண்ணீரில் கதைசொல்லுகிறான்..!!
 
சில்லரையாய் பலர் கருனைகாட்ட
தாள்களாய் சிலர் தன் பெருமைகாட்ட
பாவமென்று பார்வையிலே பலர் பாஷைபேச
 
ஒருவன் மட்டும்
ஏளன புன்னகைகொண்டு
கடந்துபோகிறான்.....!!
குட்டிக்குட்டி பொம்மைகளை
ஒற்றை கைதனில் சுமந்தபடி
ஒற்றைகாலுடன்...!!
 
-பிசாசு-
 
 
 
 
 
 
 

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...