Monday, August 9, 2021

நீ

மனதை உருக்கி
மாயங்கள் செய்யும் 
மாயக்காரியடி நீ..!!

உயிரை எடுத்து 
ஆழம் பார்க்கும் 
மோசக்காரியும்  நீயுமடி..!!

சட்டையிழுத்து
மார்பிலணைக்கும்
சாகசக்காரியடி நீ..!!!

முத்தம் கொடுத்து
திக்க வைக்கும்
மோகக்காரியும் நீயடி..!!

வேசமில்லா நேசம் காட்டும்
பாசக்காரியடி நீ…!!

பனிதுளியில் நனைந்து
வாசங்கள் சேர்ந்த

பூக்கள் வளர்க்கும் 
தோட்டக்காரியும் நீயடி..!!

உன்னை எனக்கே தந்து
காதல் வழி கைகோர்த்து
வரும் என் வீட்டுக்காரியும்
நீ மட்டும் தானடி…!!!
-பிசாசு-




நானுன்னால்

 
எழுதவேண்டுமெனும் போதெல்லாம்
என் முன்னே புன்னைக்கிறது
உன் முகம்..!!
 
அனைத்துக்கொள்ள துடிக்கும்
கரங்களுக்கிடையில்
காற்றாய் தீண்டும் உன்
பரிசம்..!!
 
 
சகியே..!!
 
வானம் தூரமில்லை
உன் கை நான் கோர்க்கையில்...
நானம் குறையவில்லை
நானுனை தீண்டுகையில்..!!!
 
வெறுத்து நான்
விலகி நாணொன்றாய்
நீளும் போதெல்லாம்
 
பொறுத்து நீ
நெருங்கிவந்து
அள்ளியெடுத்து
அனைத்துக்கொள்ளும் தாயென நீ
 
கடந்து நான் வந்த உறவுகளில்
எனைவிட அதிகமாய்
எனை நேசிப்பவள் நீ
 
கரைந்து நான் போவதாயினும்
மறந்துனை நான் கடப்பதாயினும்
மரணித்தாகவே வேண்டும்
என்கிறது இதயம்..!!
-பிசாசு-

காதலின்பம்

உன் பார்வையில் மயங்குகிறேன்
தீண்டலில் உருகுகிறேன்
உனை அணைத்து நான் கசங்குகிறேன்
முழுதும் உன்னிலே தொலைந்து
போகிறேன்
 
சகியே..
 
விடை கொடுக்க வேண்டம்
நாம் சேர்ந்து இருக்கும் நிமிடங்களுக்கு
தடை விதிக்கவும் வேண்டாம்
நம் நெருக்கங்களுக்கு
 
நாட்கள் அப்படியே உறைந்து போகட்டும்
உன் மடியில் என் ஜீவன்
உருகி ஓடட்டும்…!!!
#பிசாசு


Saturday, July 3, 2021

சேர்த்து வையுங்கள்

 
காதலொருபோதும்
குடும்பத்தின் பாசத்தை
கூறுபோட நினைப்பதில்லை
 
எந்த ஒரு காதலர்களும்
உறவுகளைவிட்டு
தனியாகி வாழ விரும்புவதில்லை
 
அந்தஸ்து
பணம்
ஜாதி
படிப்பு
இவைகளை கொண்டு
திருமணத்தை தீர்மானிக்காதீர்கள்..!!!
 
தனியாக வாழ
பிரிந்துபோக
நீங்களே காரணமாகிவிடாதீர்கள்..!!!
 
மனம்
குணம்
காதல்
இவைகளினால் மட்டுமே
உறவுகளை உணரவைக்க முடியும்..!!!
 
புரிந்துகொள்ளுங்கள்
பேரம் பேசி லாபம்
தேட காதல் வியாபாரம் அல்ல
நீங்கள் பெற்றவைகள்
பிள்ளைகளே தவிர
பொருட்கள் அல்ல..!!!
 
உண்மை காதல் என்றால்
சேர்த்துவையுங்கள் 
ஒரு போதும் வாழ்க்கையில் 
காதல் தோற்றுப்போகாது..!!!
 
பிசாசு😈😈😈😈
 


Friday, April 23, 2021

அவர் அவர் கையில்..!!

கிழிந்த ஆடைகளோடு
கருகிப்போன மேனியாய்
துவண்டுபோன முகத்துடன்
ஒரு ஓரமாய் அமர்ந்தங்கு
புலம்பிக்கொண்டிருக்கின்றான்
 
வறுமையென்று
வாய்பேசிக்கொண்டிருக்கின்றான்
அந்த வாலிபன்..!!
 
முறையான கல்வியில்லை
தொழிலொன்றும் கற்கவில்லை
அரசாங்கமென்ன
அரசியல்வாதிகளும் கூட
கண்டுக்கொள்ளவி்ல்லையென
விரல் நீட்டி காட்டுகிறான்...!!
 
அப்பன் சொத்து சேர்க்கவில்லை
சொந்தங்கள் ஏதும் உதவிடவில்லை
 

வந்தவள் வரன்கொண்டுவரவில்லை
பிறந்தவளும் கூட லெச்சுமியாயில்லை
என்றெல்லாம் குற்றங்கள் சுமத்துகின்றான்..!!
 
பசித்த வயிறுக்காய்
தான் சுவைத்த உயிருக்காய்
ரசித்த குழந்தைக்காய்
மனம் இறங்கி மானம் துறந்து
கையேந்தி நிற்கின்றேன் என்று
கண்ணீரில் கதைசொல்லுகிறான்..!!
 
சில்லரையாய் பலர் கருனைகாட்ட
தாள்களாய் சிலர் தன் பெருமைகாட்ட
பாவமென்று பார்வையிலே பலர் பாஷைபேச
 
ஒருவன் மட்டும்
ஏளன புன்னகைகொண்டு
கடந்துபோகிறான்.....!!
குட்டிக்குட்டி பொம்மைகளை
ஒற்றை கைதனில் சுமந்தபடி
ஒற்றைகாலுடன்...!!
 
-பிசாசு-
 
 
 
 
 
 
 

Saturday, November 21, 2020

மனிதம் இறந்ததோ

மனிதம் எங்கே போகின்றது

மரணத்திலும்
மங்கை அவளின் 
மனம் மறந்து போனது
மானிடம்

ஆடை விழக்கி
அதில் சுகம் தேடும்
ஆண் வர்கம் 
வெட்கப்பட வேண்டியது 
ஆணாய் பிறந்ததற்கு

வரலாற்றில்
சேலை கொடுத்த கேசவன்
இன்று எங்கே சென்றான்..??
அவனும் செல்பி 
எடுத்துக்கொண்டிருந்தானோ
ராதையின் கூடாரத்தில்..???

சுற்றியிருந்தவர் நூறு
ஒரு துளியளவு கூடவா
துனிவுமில்லாது போனது
துணியும் இல்லாது போனது
இவள் தேகத்தை மறைக்க..???

கலியுகம்தானிது
கமராக்கலில் இருந்து
காம ராஜாக்கள்
பிறந்திருப்பதால்..!!!

பிசாசு😈😈😈😈

https://m.facebook.com/story.php?story_fbid=1307690929314801&id=100002217199095

நிழலாடும் நினைவுகள் ❤️

நிழலாடும் நினைவுகள்
கண் மூடி உனை நான் கனவுகளிலும் 
காதல் செய்வேன்- நிஜமாக நீ என்னுள் 
உயிரோடி கிடக்கின்ற போதும்…!!!

நீயும் நானும் சந்திக்காத போதும்
ஒருவரையொருவர்  
காதலை சிந்தித்தோம்..!!!
தனித்தனியே காதல் கொண்டும்
தனிமையில் எமை நாம் 
வஞ்சித்தோம்..!!!
இன்று நீயும் நானும் நாமாகி 
உயிராய் ஓர் உறவாகி 
காதலில் தித்தித்தோம்..!!!

உன் வெட்கங்கள் உடைத்து
நீ கொட்டித்தீர்தாய் உன் காதலை
நான் என் கவிதைகளை 
கடன் கொண்டு முட்டி மோதினேன்..!!!

நிஜமாகவே 
இன்னமும் ஆச்சரியம் தானடி
ஏன் நீ என்னுள் விழுந்தாய் 
நானெப்படி உன்னுள் 
தொலைந்தேனெற்று..!!! 

தேடித் தேடி தீராத காதலை நீ தந்தாய்
இனி நாம் கூடிக் கூடி காதல் செய்வோமடி..!!!

நிஜங்கள் எல்லாம்
நம்முள் நின்றாட 
தினம் தினம் 
காதலும் கவிதைகளுமாய் 
என்னுள் நிழலாடிக்கிடக்க
மீண்டும் மீண்டும் நானுள்ளே
உயிராடிப் போகின்றேனடி…!!!!

-பிசாசு-

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...