மனதை உருக்கி
மாயங்கள் செய்யும்
மாயக்காரியடி நீ..!!
உயிரை எடுத்து
ஆழம் பார்க்கும்
மோசக்காரியும் நீயுமடி..!!
சட்டையிழுத்து
மார்பிலணைக்கும்
சாகசக்காரியடி நீ..!!!
முத்தம் கொடுத்து
திக்க வைக்கும்
மோகக்காரியும் நீயடி..!!
பாசக்காரியடி நீ…!!
பனிதுளியில் நனைந்து
வாசங்கள் சேர்ந்த
பூக்கள் வளர்க்கும்
தோட்டக்காரியும் நீயடி..!!
உன்னை எனக்கே தந்து
காதல் வழி கைகோர்த்து
வரும் என் வீட்டுக்காரியும்
நீ மட்டும் தானடி…!!!
-பிசாசு-