"நிஜங்களின் நிழல்களில் ஒட்டிக்கொண்ட கறும்மை எடுத்து இரவுகளில் கண்விழித்து கதறிதிரியும் பிசாசுவின் பிதற்றல்கள் இந்த கவிதைகள்" -பாலகிருஷ்ணன் சந்ரு-
Monday, May 27, 2019
Thursday, May 2, 2019
நினைவால் தீ அணைப்பேன்..!!!
நினைப்பதற்கு பல நினைவுகள்
இருந்தபோதும் உன் நினைவை விட
இனிமையான நினைவுகள்
எதுவும் இல்லை எனக்கு..!!!
நீ யாரென்று தெரியாமல் தொடங்கிய
என் காதல் கதையில
நீதான் கருவானாய்.- என் உயிரின்
கதாபாத்திரமானாய்..!!!
என் வாழ்க்கை புத்தகத்திற்கு
முகவுரை எழுதுவதற்காக - நான்
என் இதய பக்கங்களை திறந்து
வைத்தேனடி சகி
நீ எழுதி வைத்தாய் ஓர் அழகான
கவிதை புத்தகத்தை..!!!

பக்கமாய் நீ இருக்கும் போது
உன் கக்கத்தில் நான் இருப்பேன்
கொஞ்சம் தூரமாய் நீயிருக்கையில்
உனை காற்றாய் நான் தொடுவேன்...!!!
பார்க்கின்றபோது காதலால் நான் இழைத்தேன்
பார்க்காது தவிகின்றபோது கவிதையால்
உனை ரசித்தேன்..!!!
வெட்கமாய் நீ விழி மூடுகையில்
வெப்பமாய் உனை தீண்டினேன்..!!
தெப்பமாய் நான் நனைந்து
நினைவால் தீ அணைப்பேன்..!!!
இதற்கு மேலும் என்னடி சொல்ல
எனக்காக உன்னை நீ கொடுத்துவிடு
என்னையே உனக்காய் எழுதிக்
கொடுத்த பிறகு….!!!

-பிசாசு-😈😈😈😈
Subscribe to:
Posts (Atom)
நீ
மனதை உருக்கி மாயங்கள் செய்யும் மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து ஆழம் பார்க்கும் மோசக்காரியும் நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...

-
எதை இழந்து தேடினாலும் நீயே கிடைக்க பெறுகிறாய் எது தொலைந்து போனாலும் உன்னாலேயே களவாடப்படுகிறது எவை மறக்கப்படுகிறதோ அவைள் அணைத்...
-
மூச்சுக்கு முன்னூறுதடவை என் பெயர் உச்சரித்தவள் இன்று ஒரு பேச்சுக்கு கூட என் பெயர்க்கொண்டு அழைக்க மறுக்கின்றாள் என்னை மறந்துபோன என் காதலை ம...
-
நீ இல்லாத நாட்கள் வாசமில்லா பூக்களாய் என் நந்தவனம்..!!! வெளிச்சமற்ற விண்மீன்களின் ஊர்வலமாய் எந்தன் வானம்..!!! நீ இல்லாத நாட்கள் உறங்காத கண்...