நினைப்பதற்கு பல நினைவுகள்
இருந்தபோதும் உன் நினைவை விட
இனிமையான நினைவுகள்
எதுவும் இல்லை எனக்கு..!!!
நீ யாரென்று தெரியாமல் தொடங்கிய
என் காதல் கதையில
நீதான் கருவானாய்.- என் உயிரின்
கதாபாத்திரமானாய்..!!!
என் வாழ்க்கை புத்தகத்திற்கு
முகவுரை எழுதுவதற்காக - நான்
என் இதய பக்கங்களை திறந்து
வைத்தேனடி சகி
நீ எழுதி வைத்தாய் ஓர் அழகான
கவிதை புத்தகத்தை..!!!

பக்கமாய் நீ இருக்கும் போது
உன் கக்கத்தில் நான் இருப்பேன்
கொஞ்சம் தூரமாய் நீயிருக்கையில்
உனை காற்றாய் நான் தொடுவேன்...!!!
பார்க்கின்றபோது காதலால் நான் இழைத்தேன்
பார்க்காது தவிகின்றபோது கவிதையால்
உனை ரசித்தேன்..!!!
வெட்கமாய் நீ விழி மூடுகையில்
வெப்பமாய் உனை தீண்டினேன்..!!
தெப்பமாய் நான் நனைந்து
நினைவால் தீ அணைப்பேன்..!!!
இதற்கு மேலும் என்னடி சொல்ல
எனக்காக உன்னை நீ கொடுத்துவிடு
என்னையே உனக்காய் எழுதிக்
கொடுத்த பிறகு….!!!

-பிசாசு-😈😈😈😈
No comments:
Post a Comment