தீராத காதல் நீ அன்பு..!!
அன்பு உன்னோடு
கைகோர்த்து நடை பயில
வேண்டுமடி...!
அன்பு உன்னோடு
காதல் மொழி பேசி காலம் மறக்க வேணடுமடி...!
அன்பு என்னில்
உயிர் காதல் நீ கொள்ள
வேண்டுமடி..!
அன்பு என்னில்
பித்தாகி எனை நீயடிமையாக்க வேண்டுமடி...!
அன்பு உனை
அள்ளியெடுத்து செல்லம்
கொஞ்சிட வேண்டுமடி....!
அன்பு உனை
மெல்ல அணைத்து
முத்தங்கள் நான் பதித்திட
வேண்டுமடி...!
வேண்டுமடி...!
அன்பு உன்னில்
என் விரல்கொண்டு கவிதைகள் பல
கிறுக்கிட வேண்டுமடி.....!
அன்பு உன்னில்
மெய்மறந்து தலை தாழ்த்தி
உறங்கிட வேண்டுமடி...!
அன்பு உனக்குள்
நான் நீயென கலந்திட
வேண்டுமடி...!
அன்பு உனக்காகவே
வாழ்ந்து இறந்திட
வேண்டுமடி..!
இன்றில்லை யென்றால் என்னடி
என்றேனுமோர் நாள்
ஏதேனுமோர் ஜென்மம்
வாழ்வோம் நாமடி...!!!!
-பிசாசு-
அருமையான கவிதை, வார்த்தை இல்லை
ReplyDelete