இரு வேறு மனம்
இரு வேறு குணம்
ஒன்றாய் இணைந்திடும் தருணமது..!!!
காதலித்த காலங்கள்
கடந்து ஓர் கரைதொட்டு
புது வாழ்வொன்றில்
காலடி பதிக்கும்
நாளது..!!!
உறவுகள் பல கூடி ஒருபுறம்
சொந்தங்கள் சில சேர்ந்து மறுபுறம்
நட்பூக்களின் நகையாடல் ஒரு புறம்
மழலைகளின் சந்தங்கள் மறுபுறமென
நாற்புறமும் மகிழ்ச்சியில்
திளைக்கும்
நிகழ்வது..!!!
யாருக்கு யரென தெரியாத
ரகசியங்கள் உடைப்பட்டு
நீதான் நானென்று
நான் தான் நீயென்று
கடவுள்போட்டதொரு முடிச்சென்று
கையெழுத்திடும்
வைபவமது..!!!
மருதாணி கோலமிட்டு
உடல் மறைத்து பளிங்காய்
ஆடைகளுடுத்தி
மணவறையில் மனமிரண்டும்
உடலொன்றாய் உறசிக்கொள்ளும்
தருணமது..!!!
மாலைகள் ஒவ்வொன்றாய்
இடம் மாறி
தாலியாய் ஒரு அடையாளம்
அவளுக்காய்...
மெட்டியாய் இன்னொரு அடையாளம்
இவனுக்காய்...
ஆனந்த கண்ணீரில்
அபிஷேகம் செய்திடும்
நேரமது...!!!
அழகுக்கழகு சேர்த்து
பேரழகாய் உருமாற்றி
நகைகள் பல சேர்த்து
புன்னகையால் தேரழகாக்கி
புகைபடமெனும்
சேமிப்பில் பதியும்
நினைவது..!!!
ரசித்து ருசித்து
பல விருந்துகள் செய்து
நவரசம் சேர்த்து
வந்தவரெல்லம் வயிறாரி
மனமுவந்து
மணம் நிறைந்து
வாழ்த்துக்கள் சொல்லும்
நாளது..!!!
களைப்பினில் விழுந்து
ஆடைகள் கசங்கி...
கலவி முடிந்து வரும்
பெருமூச்சாய்
ஒரு மூச்சிவிட்டு..
முகம் பார்த்து...
சாதித்த சந்தோஷத்தில்
வாழ்வின் உச்சம் தொடும்
தருணமது..!!!
இப்படியான
நாளொன்றினை கடந்திடாத
மனங்களும் பல உண்டு..!!!
திருமணம் என்பதே
இருமணம்சேரும்
ஒருநாளென்பதை மறந்து
மனிதர்களும் கூட
பல உண்டு..!!!
ஜாதி மதமென்று
வசதி வாய்பென்று
பல கதைகள் கூறி
மனங்களை பிரித்து
ரணங்கள் சேர்த்து மரணத்தின் பின்
புத்திதெளிந்த உள்ளங்களும்
இங்குண்டு..!!!
திருமணம் என்பது
ஆடம்பரத்தில் இல்லை
என்று உணரும் மனங்களும்
வாழ்ந்துகொண்டுதானிருக்கின்றன
தனிமையில் உறவுகள் எல்லாம்
உதறிதள்ளிய போதும்..!!!
எது எப்படியான போதும்
திருமணம் என்பது எல்லோருக்கும்
வாய்பதில்லை..!!!
-பிசாசு-
அருமையான கவிதை அருமை.
ReplyDeleteநன்றிகள்
Delete