Wednesday, June 10, 2020

அன்பினால்..


முனைகளின் கூர்மையினால்
குத்துகின்ற வலிகளையெல்லாம்
வார்த்தைகளாக்கி
நிறமூட்டி நிஜம் காட்டும் தாள்களும்
காதலித்துக்கொண்டுதான் இருக்கின்றது
எழுத்தாணிகளை .!!!

எண்ணங்கள்
எவையானபின்பும்
அழுத்தங்கள் வலிக்கின்றபோதும்
மௌனமாயிருந்து
குருதியில் உறைந்து -தானும்
காதலித்துக்கொண்டுதான் இருக்கின்றது
தாள்களை எழுத்தாணிகள்..!!!

பெண்மையாய் பேனைகள்
மென்மைகொள்ளாத போதெல்லாம்
அழுத்தும் கூர்மையின் வலியையும்
கூட வாங்கிகொள்கின்றது
நகழ்களாக..!!!

பிழையென ஆனபின்பும்
கசக்கியெறியும் போதெல்லாம்
குப்பைத்தொட்டிக்குள்
கட்டிப்புரண்டு
சல்லாபம் தீர்க்கின்றது
எழுத்துப்பிழைகளோடு
தாள்கள்..!!!

சரியென ஆகி
மூடிவைக்கின்ற போதெல்லாம்
மடிசாய்ந்து
உடலுரசி உள்ளம் குளிர்ந்து
தாம்பத்தியம்கொள்கின்றது
தாள்களோடு
எழுத்துக்கள்..!!!


எத்தனை பிழைகள்
எண்ணிலடங்கா குறைகள்
அத்தனையும் வருகின்ற போதெல்லாம்
அந்நியோன்னியத்தின்
அழங்கரிப்புக்களாலே
தாழ்களும் எழுத்தாணிகளும்
முழுநிறைவாய் எழுத்துக்களை
பிரசவிக்கின்றன..!!!

ஆம்
எழுதிய புத்தகங்களும்
கிழித்து கசக்கி எறியும்
பக்கங்களும்
குடித்தனம் நடத்திக்கொண்டுதான்
இருக்கின்றன
மௌனமாய்..!!!

-பிசாசு-



2 comments:

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...