Monday, August 9, 2021

நீ

மனதை உருக்கி
மாயங்கள் செய்யும் 
மாயக்காரியடி நீ..!!

உயிரை எடுத்து 
ஆழம் பார்க்கும் 
மோசக்காரியும்  நீயுமடி..!!

சட்டையிழுத்து
மார்பிலணைக்கும்
சாகசக்காரியடி நீ..!!!

முத்தம் கொடுத்து
திக்க வைக்கும்
மோகக்காரியும் நீயடி..!!

வேசமில்லா நேசம் காட்டும்
பாசக்காரியடி நீ…!!

பனிதுளியில் நனைந்து
வாசங்கள் சேர்ந்த

பூக்கள் வளர்க்கும் 
தோட்டக்காரியும் நீயடி..!!

உன்னை எனக்கே தந்து
காதல் வழி கைகோர்த்து
வரும் என் வீட்டுக்காரியும்
நீ மட்டும் தானடி…!!!
-பிசாசு-




நானுன்னால்

 
எழுதவேண்டுமெனும் போதெல்லாம்
என் முன்னே புன்னைக்கிறது
உன் முகம்..!!
 
அனைத்துக்கொள்ள துடிக்கும்
கரங்களுக்கிடையில்
காற்றாய் தீண்டும் உன்
பரிசம்..!!
 
 
சகியே..!!
 
வானம் தூரமில்லை
உன் கை நான் கோர்க்கையில்...
நானம் குறையவில்லை
நானுனை தீண்டுகையில்..!!!
 
வெறுத்து நான்
விலகி நாணொன்றாய்
நீளும் போதெல்லாம்
 
பொறுத்து நீ
நெருங்கிவந்து
அள்ளியெடுத்து
அனைத்துக்கொள்ளும் தாயென நீ
 
கடந்து நான் வந்த உறவுகளில்
எனைவிட அதிகமாய்
எனை நேசிப்பவள் நீ
 
கரைந்து நான் போவதாயினும்
மறந்துனை நான் கடப்பதாயினும்
மரணித்தாகவே வேண்டும்
என்கிறது இதயம்..!!
-பிசாசு-

காதலின்பம்

உன் பார்வையில் மயங்குகிறேன்
தீண்டலில் உருகுகிறேன்
உனை அணைத்து நான் கசங்குகிறேன்
முழுதும் உன்னிலே தொலைந்து
போகிறேன்
 
சகியே..
 
விடை கொடுக்க வேண்டம்
நாம் சேர்ந்து இருக்கும் நிமிடங்களுக்கு
தடை விதிக்கவும் வேண்டாம்
நம் நெருக்கங்களுக்கு
 
நாட்கள் அப்படியே உறைந்து போகட்டும்
உன் மடியில் என் ஜீவன்
உருகி ஓடட்டும்…!!!
#பிசாசு


நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...