Wednesday, May 9, 2018



நான் தனியே தான் கிடந்தேன்
துணையாய் நீ உடன் வர
தனிமையை துறந்தேன்..!!!

நிலவே நீ
பகலிலும் வரவே
நாளும் இதமானதே..!!!


கனவேதும் இல்லை சகியே
நினைவாகி 
நிஜமாகி
நிலையாகி 
நீயென்னோடு 
துணையாகியிருப்பதனால்...!!!

-பிசாசு-

பரிசு

குட்டி குட்டி
கவிதைகள் சொல்வேன்
அன்பே..!!!

எச்சில் இல்லா
முத்தங்களாயிரம்
நெற்றியில் வைப்பேன்
உயிரே...!!!


எட்ட நீ
வெட்கப்பட்டு ஓடிப்போகையிலே
எட்டி பிடித்துனை
என் மார்பில் அனைபேன்
கண்ணே...!!!
செல்லமாய் நீ எனை கிள்ளிப்பேச
என்றும் நீ மறவாதிருக்க
பரிசொன்றை
தருவேன்
சகியே....!!!!
-பிசாசு-

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...