உனக்கும் எனக்கும்
தாய்மொழி ஒன்றுதானே
தொணிகள் வேறானபோதும்…!!!
உனக்கும் எனக்கும்
ஏக்கங்கள் ஒன்றுதானே
காரணங்கள் வேறானபோதும்….!!!!
உனக்கும் எனக்கும்
நாடு ஒன்றுதானே
ஊர்கள் வேறானபோதும்..!!!!
சகியே…
நீயும் நானும்
வேறு வேறுதான்
இருந்தும்
வேர் ஒன்றுதான்
அது காதல் தானே..!!
-பிசாசு-
No comments:
Post a Comment