Saturday, November 21, 2020

மனிதம் இறந்ததோ

மனிதம் எங்கே போகின்றது

மரணத்திலும்
மங்கை அவளின் 
மனம் மறந்து போனது
மானிடம்

ஆடை விழக்கி
அதில் சுகம் தேடும்
ஆண் வர்கம் 
வெட்கப்பட வேண்டியது 
ஆணாய் பிறந்ததற்கு

வரலாற்றில்
சேலை கொடுத்த கேசவன்
இன்று எங்கே சென்றான்..??
அவனும் செல்பி 
எடுத்துக்கொண்டிருந்தானோ
ராதையின் கூடாரத்தில்..???

சுற்றியிருந்தவர் நூறு
ஒரு துளியளவு கூடவா
துனிவுமில்லாது போனது
துணியும் இல்லாது போனது
இவள் தேகத்தை மறைக்க..???

கலியுகம்தானிது
கமராக்கலில் இருந்து
காம ராஜாக்கள்
பிறந்திருப்பதால்..!!!

பிசாசு😈😈😈😈

https://m.facebook.com/story.php?story_fbid=1307690929314801&id=100002217199095

நிழலாடும் நினைவுகள் ❤️

நிழலாடும் நினைவுகள்
கண் மூடி உனை நான் கனவுகளிலும் 
காதல் செய்வேன்- நிஜமாக நீ என்னுள் 
உயிரோடி கிடக்கின்ற போதும்…!!!

நீயும் நானும் சந்திக்காத போதும்
ஒருவரையொருவர்  
காதலை சிந்தித்தோம்..!!!
தனித்தனியே காதல் கொண்டும்
தனிமையில் எமை நாம் 
வஞ்சித்தோம்..!!!
இன்று நீயும் நானும் நாமாகி 
உயிராய் ஓர் உறவாகி 
காதலில் தித்தித்தோம்..!!!

உன் வெட்கங்கள் உடைத்து
நீ கொட்டித்தீர்தாய் உன் காதலை
நான் என் கவிதைகளை 
கடன் கொண்டு முட்டி மோதினேன்..!!!

நிஜமாகவே 
இன்னமும் ஆச்சரியம் தானடி
ஏன் நீ என்னுள் விழுந்தாய் 
நானெப்படி உன்னுள் 
தொலைந்தேனெற்று..!!! 

தேடித் தேடி தீராத காதலை நீ தந்தாய்
இனி நாம் கூடிக் கூடி காதல் செய்வோமடி..!!!

நிஜங்கள் எல்லாம்
நம்முள் நின்றாட 
தினம் தினம் 
காதலும் கவிதைகளுமாய் 
என்னுள் நிழலாடிக்கிடக்க
மீண்டும் மீண்டும் நானுள்ளே
உயிராடிப் போகின்றேனடி…!!!!

-பிசாசு-

நீதான்..!!!

உன்னை பிரிந்து வாழ 
மனமில்லை
மறந்து போகவும் 
தைரியமும் இல்லை
பின் எப்படி உன்னை விட்டு 
நான் போவேன்..???
முயற்சிக்கவே 
முடியாதுபோகத்தான் -உன் 
மூச்சோடு நான் கலந்து 
இப்படியானேன்..!!!

என் சகியே..???

ஒரு நொடி பிரிந்தாலும் 
மறு நொடி இறந்துபோகும்
என்னியத்தை 
எதைக்கொண்டு 
எப்படி நான் மூடி வைப்பேன்..???

ஆசைகளை அடக்கி 
ஆளத்தெரியவில்லை
உன்னை போல்
அன்பை கூட பூட்டிவைக்க 
தெரியவில்லை..!!!

தெரிந்ததெல்லாம்
ஒன்றேதான் 
அதுவும் நீ மட்டும் தான் சகியே...!!!

-பிசாசு-😈😈😈

அலாதி அன்பின் ஆதி ❤️❤️ காதலும் காமமும்

அலாதி அன்பின்
ஆதி நீ-அள்ளி 
அணைத்துகொள்வேன்
நெஞ்சோடு...!!!


முதல் முத்தமதை 
நெற்றியிலே எப்பொழுதும்
நான் பதிப்பேன் – சம்மதம்
கேளாது..!!!

சங்கடங்கள் 
கொள்ளாதே சகியே
முத்ததின் 
சந்தங்களை ரசிப்போம்...!!!

கண்களினால் பேசிக்கொள்வேன்
மூடித்திறக்கும் இமைகளை
ரசிக்கும் பார்வையில்
நானே இதழ்கொண்டு 
மூடிக்கொள்வேன்...!!!

கரங்களிரண்டை
காதோடு பதித்து- உன்
முகம் சிந்தும் வெட்கத்தின்
புன்னைகையை 
ரசிப்பேன் என் சகியே...!!!

கண்ணங்கள் கிள்ளி
முத்தங்கள் வைத்து
கவிதைகள் சொல்லி
நானமதில் நீயுறைய
சம்மதம் கேட்டு
உதடுகளை சுவைப்பேன்..!!!

காதோடு காதல் சொல்லி
கழுத்தோடு சுவாசித்து
ரோமங்கள் விலக்கி
விரல்களினால் ஓவியம்
தீட்டுவேன் உன் மார்பினில்..!!!

கொடியாய் நீ வளைய
இடையோடு நான் அணைத்து
மார்போடு சாய்த்து
மறுகணம் உச்சு முகர்ந்து
முத்தங்கள் நான் கொடுப்பேன்...!!!


மகிழ்ந்து நீ 
மனதினை விரித்து 
வெட்க்கத்தில் சம்மதமாய் 
உன் முத்தத்தை 
என் நெற்றியில் பதித்திட 
புன்னகை நான் சிந்துவேன்..!!!

இதழினில் இனித்திட 
இயல்புநிலை இடம்மாற 
முத்தங்கள் கொடுத்துவிடு நீ
உன் இதழ்கொண்டு
என்னிதழ் தோய்த்துவிட 
இடையோடு இறுக்கி உனை நான்
அணைப்பேன்..!!!

ஆடைகள் மூடாத பாகமெல்லாம்
விரல்களினால் கடந்து 
இதழ்களினால் ஈரமாக்கி
ஆடைகள் விலக்கி
அங்கங்கள் ரசிப்பேன் 
என் சகியே...!!!

உன் பாதங்களை ஏந்தி 
கொலுசினை தாண்டி
நான் பதிக்கும் முத்தங்களால்
தேகம் முழுவதும் சிலிர்த்திட...!!!

விரல்களோடு விரல்கள் 
பிண்ணிக்கொள்ள
உன் காந்தமேனியில்
என் தேகமுரசி...!!!

பெண்மை வரை இதழ்கொண்டு
நா திறந்து தேனமுதை 
நான் சுவைக்க-தலை கோதி
விரல் மீட்டி நீ எனை இழுத்து 
உன் இதழ் பதிக்க...!!!

சம்மதம் நான் கேட்டு...!!!

தேவதையே உன் தேகமதில்
என் தேகம் கலப்பேன்...!!!




என்னாசைகள் மட்டுமல்ல
உன்னாசைகளுக்கும் இடம் 
கொடுப்பேன்- தடம் பதித்துவிடு
தடைகள் எதிலுமில்லை...!!!

இதயமும் இடம்மாற
தேகமும் இடம்மாற
ஒரு போக இரவுக்குள்
மேக மெத்தையிட்டு 
யாகம் வளர்ப்போம் வா சகியே..!!!

யாகத்தின் முடிவில் 
தியாகம் ஏதும் இல்லை
மார்பினில் சாய்ந்து
விரல்கள் கோர்த்து
காதல் மொழி பேசலாம்

மீண்டும்......

அலாதி அன்பின்
ஆதி நீ-அள்ளி 
அணைத்துகொள்வேன்
நெஞ்சோடு...!!!

-பிசாசு-

Saturday, November 7, 2020

காதல் படுத்தும் பாடு (உயிரெழுத்துக்களில்)


ழகாய் நீ தந்த முத்தம்
அமிர்தமாய் இனிக்க
அளவுக்கதிமாய் பருகிவிட்டு மயக்கத்தை
அனுபவிக்கிறேன்- ஏதுமறியாது
அமைதியாய் சிரிக்கின்றாய்...!!!
................................................................
யுள் முழுதுவதும் நீ என்னோடு..
ஆனந்தத்தில் நான் வானோடு..
ஆசைகளை சேமித்து அன்போடு வாழ்வோம்
ஆடம்பரம் எதற்கடி- நம் காதலே
ஆதாரம் நமக்கடி..!!!
.................................................................
டை வளைத்து இறுகப்பற்றிய கரம் 
இன்னும் வாசம் கூட்டுகிறது
இது நீ தந்த வரமா?
இல்லை வாலிபத்தின் சாபமா?
இன்னும் புரியவில்லையடி….!!!
................................................................
சனின் ஆணையாய்- எனை
ஈன்றவளின் ஆசைகளில் ஒன்றாய்
ஈடிகைக்கொண்டு எழுதிவைக்கின்றேன்
ஈடில்லா உறவு நீயென்று-  வாழவோம் நாம்
ஈருடல் ஓர் உயிரென சகியே..!!!
..............................................................................
னை அள்ளி எடுத்து அணைத்துக்கொள்ள
உயிர் வரை வாசம் வீசுகின்றது காதல்
உனை தள்ளி விட்டு கடந்திடும் போதெல்லாம்
உயிர் வரை வலிகொடுகின்றது பிரிவு- நான் என்பது
உன்னிலே தொடங்கி உன்னிலே முடியட்டும்..!!!
.........................................................................................
ரெல்லாம் தனிமைபட்டு கிடக்கின்றது
ஊரடங்கு உத்தரவில்- காலம் தனை கிழித்து
ஊமையாய் காதல் மௌனித்திருக்க
ஊண் இன்றி உறக்கமின்றி – உளரி தீர்கின்றது
ஊடலில் கவிதை..!!!
.........................................................................................

ன்னோடு மட்டும் எல்லைகள் நீ வகுப்பதில்லை
எதுவென்றாலும் எதில் நீ வென்றாலும் 
எப்படி என்றாலும் உன்னிடம் மட்டும் தோற்பதில்
எனக்கென்றும் பேரானந்தம் தான்- அதனாலே
எப்பொழுதும் நாம் தோற்பதேயில்லை சகியே..!!!
.........................................................................................
னென்று புரியாத ஒரு உணர்வே காதலாய் 
ஏக்கங்கள் கொடுத்து தூக்கம் தனை கெடுத்து
ஏதுமறியா மழலையாய் மாற்றி- புன்னகையோடு
ஏந்திட செய்யும் வலிகளையும் – கண்ணீரையும்
ஏற்றுக்கொள்ளும் வலிமையே காதல்..!!!
.........................................................................................
ங்கணையெடுத்து உனை உடுத்துவேன்
ஐயம் தவிர்த்துக்கொள் நான் உனக்கானவன்
ஐந்தெழுத்தில் கவிதைகொண்டு 
ஐம்பொறி தீண்டி முத்தமிடுவேன்- சகியே
ஐம்புலத்தார் முன் உன் கழுத்தில் மலையிடுவேன்..!!!

.........................................................................................

ன்றான இரண்டு இதயங்களில்
ஒலித்துக்கொண்டிருக்கும் காதலிசை
ஒன்றுதான்- மீசை நரைத்து உடல் தளரத்து
ஒருநாள் வாழ்க்கை முடியும் என்றானபோதும்
ஒன்றாகவே நிசப்தமாகும் காதல்..!!!
.........................................................................................
வியங்களாய் தீட்டுகின்றேன் நினைவுகளை
ஓரங்க நாடகம்தனை நடத்திவிட்டு
ஓர் ராச்சியத்தில் கிரீடத்தில் வைக்கப்படும் காதலை
ஓராட்டு பாடி நீ தூங்க வைப்பா(தாய்) –நான்
ஓய்வெடுக்கின்றேன் கவிதைகளோடு...!!!
.........................................................................................
ஒளவியம் கொள்கின்றேன் மழலையை நீ கொஞ்ச
ஔடதம் தந்துவிடு என் பிணிதனை நீக்க
ஔசித்தியம் எதுவென்று சிந்திக்காதே- அன்பாய்
ஔ எனை அணைத்துக்கொள்ளடி ஆதி அந்தம்
மறந்து துயில் கொள்வோம்...





-பிசாசு-

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...