அழகாய் நீ தந்த முத்தம்
அமிர்தமாய் இனிக்க
அளவுக்கதிமாய் பருகிவிட்டு மயக்கத்தை
அனுபவிக்கிறேன்- ஏதுமறியாது
அமைதியாய் சிரிக்கின்றாய்...!!!
................................................................
ஆயுள் முழுதுவதும் நீ என்னோடு..
ஆனந்தத்தில் நான் வானோடு..
ஆசைகளை சேமித்து அன்போடு வாழ்வோம்
ஆடம்பரம் எதற்கடி- நம் காதலே
ஆதாரம் நமக்கடி..!!!
.................................................................
இடை வளைத்து இறுகப்பற்றிய கரம்
இன்னும் வாசம் கூட்டுகிறது
இது நீ தந்த வரமா?
இல்லை வாலிபத்தின் சாபமா?
இன்னும் புரியவில்லையடி….!!!
................................................................
ஈசனின் ஆணையாய்- எனை
ஈன்றவளின் ஆசைகளில் ஒன்றாய்
ஈடிகைக்கொண்டு எழுதிவைக்கின்றேன்
ஈடில்லா உறவு நீயென்று- வாழவோம் நாம்
ஈருடல் ஓர் உயிரென சகியே..!!!
..............................................................................
உனை அள்ளி எடுத்து அணைத்துக்கொள்ள
உயிர் வரை வாசம் வீசுகின்றது காதல்
உனை தள்ளி விட்டு கடந்திடும் போதெல்லாம்
உயிர் வரை வலிகொடுகின்றது பிரிவு- நான் என்பது
உன்னிலே தொடங்கி உன்னிலே முடியட்டும்..!!!
.........................................................................................
ஊரெல்லாம் தனிமைபட்டு கிடக்கின்றது
ஊரடங்கு உத்தரவில்- காலம் தனை கிழித்து
ஊமையாய் காதல் மௌனித்திருக்க
ஊண் இன்றி உறக்கமின்றி – உளரி தீர்கின்றது
ஊடலில் கவிதை..!!!
.........................................................................................
என்னோடு மட்டும் எல்லைகள் நீ வகுப்பதில்லை
எதுவென்றாலும் எதில் நீ வென்றாலும்
எப்படி என்றாலும் உன்னிடம் மட்டும் தோற்பதில்
எனக்கென்றும் பேரானந்தம் தான்- அதனாலே
எப்பொழுதும் நாம் தோற்பதேயில்லை சகியே..!!!
.........................................................................................
ஏனென்று புரியாத ஒரு உணர்வே காதலாய்
ஏக்கங்கள் கொடுத்து தூக்கம் தனை கெடுத்து
ஏதுமறியா மழலையாய் மாற்றி- புன்னகையோடு
ஏந்திட செய்யும் வலிகளையும் – கண்ணீரையும்
ஏற்றுக்கொள்ளும் வலிமையே காதல்..!!!
.........................................................................................
அமிர்தமாய் இனிக்க
அளவுக்கதிமாய் பருகிவிட்டு மயக்கத்தை
அனுபவிக்கிறேன்- ஏதுமறியாது
அமைதியாய் சிரிக்கின்றாய்...!!!
................................................................
ஆயுள் முழுதுவதும் நீ என்னோடு..
ஆனந்தத்தில் நான் வானோடு..
ஆசைகளை சேமித்து அன்போடு வாழ்வோம்
ஆடம்பரம் எதற்கடி- நம் காதலே
ஆதாரம் நமக்கடி..!!!
.................................................................
இடை வளைத்து இறுகப்பற்றிய கரம்
இன்னும் வாசம் கூட்டுகிறது
இது நீ தந்த வரமா?
இல்லை வாலிபத்தின் சாபமா?
இன்னும் புரியவில்லையடி….!!!
................................................................
ஈசனின் ஆணையாய்- எனை
ஈன்றவளின் ஆசைகளில் ஒன்றாய்
ஈடிகைக்கொண்டு எழுதிவைக்கின்றேன்
ஈடில்லா உறவு நீயென்று- வாழவோம் நாம்
ஈருடல் ஓர் உயிரென சகியே..!!!
..............................................................................
உனை அள்ளி எடுத்து அணைத்துக்கொள்ள
உயிர் வரை வாசம் வீசுகின்றது காதல்
உனை தள்ளி விட்டு கடந்திடும் போதெல்லாம்
உயிர் வரை வலிகொடுகின்றது பிரிவு- நான் என்பது
உன்னிலே தொடங்கி உன்னிலே முடியட்டும்..!!!
.........................................................................................
ஊரெல்லாம் தனிமைபட்டு கிடக்கின்றது
ஊரடங்கு உத்தரவில்- காலம் தனை கிழித்து
ஊமையாய் காதல் மௌனித்திருக்க
ஊண் இன்றி உறக்கமின்றி – உளரி தீர்கின்றது
ஊடலில் கவிதை..!!!
.........................................................................................
என்னோடு மட்டும் எல்லைகள் நீ வகுப்பதில்லை
எதுவென்றாலும் எதில் நீ வென்றாலும்
எப்படி என்றாலும் உன்னிடம் மட்டும் தோற்பதில்
எனக்கென்றும் பேரானந்தம் தான்- அதனாலே
எப்பொழுதும் நாம் தோற்பதேயில்லை சகியே..!!!
.........................................................................................
ஏனென்று புரியாத ஒரு உணர்வே காதலாய்
ஏக்கங்கள் கொடுத்து தூக்கம் தனை கெடுத்து
ஏதுமறியா மழலையாய் மாற்றி- புன்னகையோடு
ஏந்திட செய்யும் வலிகளையும் – கண்ணீரையும்
ஏற்றுக்கொள்ளும் வலிமையே காதல்..!!!
.........................................................................................
ஐங்கணையெடுத்து உனை உடுத்துவேன்
ஐயம் தவிர்த்துக்கொள் நான் உனக்கானவன்
ஐந்தெழுத்தில் கவிதைகொண்டு
ஐம்பொறி தீண்டி முத்தமிடுவேன்- சகியே
ஐம்புலத்தார் முன் உன் கழுத்தில் மலையிடுவேன்..!!!
ஐயம் தவிர்த்துக்கொள் நான் உனக்கானவன்
ஐந்தெழுத்தில் கவிதைகொண்டு
ஐம்பொறி தீண்டி முத்தமிடுவேன்- சகியே
ஐம்புலத்தார் முன் உன் கழுத்தில் மலையிடுவேன்..!!!
.........................................................................................
ஒலித்துக்கொண்டிருக்கும் காதலிசை
ஒன்றுதான்- மீசை நரைத்து உடல் தளரத்து
ஒருநாள் வாழ்க்கை முடியும் என்றானபோதும்
ஒன்றாகவே நிசப்தமாகும் காதல்..!!!
.........................................................................................
ஓவியங்களாய் தீட்டுகின்றேன் நினைவுகளை
ஓரங்க நாடகம்தனை நடத்திவிட்டு
ஓர் ராச்சியத்தில் கிரீடத்தில் வைக்கப்படும் காதலை
ஓராட்டு பாடி நீ தூங்க வைப்பா(தாய்) –நான்
ஓய்வெடுக்கின்றேன் கவிதைகளோடு...!!!
.........................................................................................
ஒளவியம் கொள்கின்றேன் மழலையை நீ கொஞ்ச
ஔடதம் தந்துவிடு என் பிணிதனை நீக்க
ஔசித்தியம் எதுவென்று சிந்திக்காதே- அன்பாய்
ஔ எனை அணைத்துக்கொள்ளடி ஆதி அந்தம்
மறந்து துயில் கொள்வோம்...
-பிசாசு-
No comments:
Post a Comment