Monday, February 20, 2017

நேற்றைய காதலியே.!!!

நெஞ்சம் கொண்டு  மஞ்சம் தந்து 
எனை தாலாட்டியது  நீதான்…!!! 
வரையரையோடு காதல்
பழக்கியவளும் நீதான்..!!


அப்பொழுதெல்லாம்

நிமிடங்கள் மறந்து
பொழுதுகள் கடந்து
காதல் பாஷை பேசித் தீர்த்தோம்..!!!
நினைவுகள் நீங்கி கனவுகள் வாங்கி
இரவிலும் நாம் காதல் செய்தோம்…!!!


நீதான் நான் -நான் தான் இனி நீ
என்றெல்லாம் உயிலில்லா
உறவெழுதினோம்..!!!
ஒட்டுமொத்த அன்பையும்
கொட்டித்தீர்த்து தான் 
காதல் வழி நடந்தோம்..!!!


இணையாத 
இருகோடுகள் என்றறிந்தும்
இடைவெளியுடைத்து 
இதயம் இடமாற்றி 
காதல் இம்சை கொண்டாடினோம்…!!



சகியே…!!!
அன்று எதுவோ எமை சேர்த்தது
அது தான் காதலா..??
இன்று எதுவோ நமை பிரித்தது
அது தான் மாயமோ..???


என் நேற்றைய காதலியே

நெஞ்சத்தில் மஞ்சம் தந்து
கொஞ்சி விளையாடிய பாதகியே…!!!
நாளையொரு நாள் பிறக்கலாம்
நாம் அன்றும் சந்திக்கலாம்

அப்பொழுதும நீ எனக்கு காதலியே
நான் மட்டும் உனக்கு
மறந்து போகாத நினைவாக
கூட இருப்பேனா நானறியேன்…!!!!
-பிசாசு-



Saturday, February 18, 2017

போய் வருகிறேன்

நம் நிலை மாற
நாளும் கூடிவர நானிங்கு
தனியாகி போகிறேன்
என் தங்கமே உன் நினைவுகளை சுமந்தபடி..!!!

வாங்கிய கடன் எல்லாம்
வரையின்றி குடித்தனம் நடத்தி
வட்டிகளை குட்டியாய்
குவித்துக்ககொள்ள
குடும்ப கட்டுபாடு செய்ய
நான் இன்று போய் வருகிறேன்
என் தங்கமே..!!!

பிறந்த நம் காதலை
வாழவைக்க நீ என்னோடு வாழ வந்தாய்
சொத்து சுகமெல்லாம்
மறந்து என் மார்பில் துயில் கொண்டாய்..!!!
தேவதையே உனை கோவில் தேராய்
ஊர்வலம் கூட்டிபோகத்தான்- நான் இன்று
போய் வருகின்றேன்..!!!

இளமை முடியும் முன் வந்துவிடுவேன்
இனிமை நாம் காணலாம்..!!
முதுமை வந்தாலும் உனை தாங்குவேன்
உயிர் போனாலும் உன் மடி சாயுவேன்..!!!

அன்று சபதம் ஏற்று
உன் கரம் சேர்த்தேன்
நம் முகமுடைத்த முகங்கள் முன்னால்
நாம் வாழ்ந்து காட்டுவோம்..!!!

தரம்கெட்டு போனதாய் சிலர் சொல்ல
நான் கேட்டேன்- உயிரே
தாரமாய் நீ வந்த பின்
தரம் கெட்டுபோகவில்லையடி
வரம் ஆயிரம் வந்து சேர்ந்ததடி..!!!

பொருத்துக்கொள்
வலிகளை மட்டுமல்ல என் காதலையும்
சேர்த்து வளர்த்துக்கொள்
நான் போய் வருகின்றேன்
போதுமடி…. கண்ணீரில் எனை நனைக்காதே
கண்மூடினாலும் உன் புன்னகை முகம்தான்
எனை தீண்டவேண்டும்..!!!

என்னையும் அழச்செய்யாதே
மழலையாய் இன்நேரம்
உன் மடிசாயச் சொல்லாதே
மறந்துபோய்விடுவேன் நான்
வலிகளையெல்லாம்…!!!

வலியோடு வழி போகிறேன்
உயிரே வாழ்க்கையில்
நாம் வெல்வோம்..!!!

கவனமாயிரு காதலோடு
போய் வருகிறேன் நான்..!!!
-பிசாசு-

Wednesday, February 8, 2017

வாடிக்கிடக்கும் என்னிதயம்

மீசை முளைக்காத வயதிலே
காதல் ஆசை காட்டியவள் நீ
பருவம் கூட இதுவென்று
பகுத்தறியா வயதினிலே
பாவை உன் பார்வை
எனை நோக்க -நான் நொருங்கியேதான் போனேன்
காதல் தரையில் வீழ்ந்து…!!!


பள்ளிக்கால காதல் பக்குவமிலந்ததாய்
பலர் சொல்ல கேட்டேன்…!!!
பாதி வழி நீ வந்து
மீதி வழி நான் தனியாகி நடக்க
தத்துவங்கள் நானுணர்ந்தேன்..!!!


அன்று பார்வைகளில் பாசம் கண்டேன்
இன்று -பார்வையிழந்து தவிக்கின்றேன்..!!

வார்த்தைகளில் வசந்தம் கொண்டேன்
இன்று- வாழ மறந்து தனியாகிபோனேன்..!!

அன்பில் ஆறுதல் அடைந்தேன்
இன்று -நீயின்றி நீரின்றி
மீனாய் துடிக்கின்றேன்…!!!
காதல் கொண்ட இதயத்தில் உனை சுமந்தேன்
கனவுகள் கொண்டு உறக்கத்திலும்
உனையே காதலித்தேன்..!!!

காலங்கள் நிறம் மாறியதோ
பெண்னே நீ இடம் மாறி போக..???

தடம் மாறிபோன என் இதயமும்
உன்னிடம் நிஜம் தேடி
தவித்து துடித்துக்கிடக்கிறது..!!!
பள்ளிக் காதல் பருவமெய்தி
பாவை உன் அணைப்பிற்காக…!!!
-பிசாசு-

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...