பழக்கியவளும் நீதான்..!!
அப்பொழுதெல்லாம்
பொழுதுகள் கடந்து
காதல் பாஷை பேசித் தீர்த்தோம்..!!!
நினைவுகள் நீங்கி கனவுகள் வாங்கி
இரவிலும் நாம் காதல் செய்தோம்…!!!
நீதான் நான் -நான் தான் இனி நீ
என்றெல்லாம் உயிலில்லா
உறவெழுதினோம்..!!!
ஒட்டுமொத்த அன்பையும்
கொட்டித்தீர்த்து தான்
இணையாத
இடைவெளியுடைத்து
சகியே…!!!
அன்று எதுவோ எமை சேர்த்தது
அது தான் காதலா..??
இன்று எதுவோ நமை பிரித்தது
அது தான் மாயமோ..???
என் நேற்றைய காதலியே
நெஞ்சத்தில் மஞ்சம் தந்து
கொஞ்சி விளையாடிய பாதகியே…!!!
நாளையொரு நாள் பிறக்கலாம்
நாம் அன்றும் சந்திக்கலாம்
அப்பொழுதும நீ எனக்கு காதலியே
மறந்து போகாத நினைவாக
கூட இருப்பேனா நானறியேன்…!!!!
-பிசாசு-