காதல் ஆசை காட்டியவள் நீ
பருவம் கூட இதுவென்று
பகுத்தறியா வயதினிலே
பாவை உன் பார்வை
எனை நோக்க -நான் நொருங்கியேதான் போனேன்
காதல் தரையில் வீழ்ந்து…!!!
பள்ளிக்கால காதல் பக்குவமிலந்ததாய்
பலர் சொல்ல கேட்டேன்…!!!
பாதி வழி நீ வந்து
மீதி வழி நான் தனியாகி நடக்க
தத்துவங்கள் நானுணர்ந்தேன்..!!!
அன்று பார்வைகளில் பாசம் கண்டேன்
இன்று -பார்வையிழந்து தவிக்கின்றேன்..!!
வார்த்தைகளில் வசந்தம் கொண்டேன்
இன்று- வாழ மறந்து தனியாகிபோனேன்..!!
அன்பில் ஆறுதல் அடைந்தேன்
இன்று -நீயின்றி நீரின்றி
மீனாய் துடிக்கின்றேன்…!!!
காதல் கொண்ட இதயத்தில் உனை சுமந்தேன்
கனவுகள் கொண்டு உறக்கத்திலும்
உனையே காதலித்தேன்..!!!
காலங்கள் நிறம் மாறியதோ
பெண்னே நீ இடம் மாறி போக..???
தடம் மாறிபோன என் இதயமும்
உன்னிடம் நிஜம் தேடி
தவித்து துடித்துக்கிடக்கிறது..!!!
பள்ளிக் காதல் பருவமெய்தி
பாவை உன் அணைப்பிற்காக…!!!
-பிசாசு-
கனவுகள் கொண்டு உறக்கத்திலும்
உனையே காதலித்தேன்..!!!
காலங்கள் நிறம் மாறியதோ
பெண்னே நீ இடம் மாறி போக..???
தடம் மாறிபோன என் இதயமும்
உன்னிடம் நிஜம் தேடி
தவித்து துடித்துக்கிடக்கிறது..!!!
பள்ளிக் காதல் பருவமெய்தி
பாவை உன் அணைப்பிற்காக…!!!
-பிசாசு-
No comments:
Post a Comment