Wednesday, February 8, 2017

வாடிக்கிடக்கும் என்னிதயம்

மீசை முளைக்காத வயதிலே
காதல் ஆசை காட்டியவள் நீ
பருவம் கூட இதுவென்று
பகுத்தறியா வயதினிலே
பாவை உன் பார்வை
எனை நோக்க -நான் நொருங்கியேதான் போனேன்
காதல் தரையில் வீழ்ந்து…!!!


பள்ளிக்கால காதல் பக்குவமிலந்ததாய்
பலர் சொல்ல கேட்டேன்…!!!
பாதி வழி நீ வந்து
மீதி வழி நான் தனியாகி நடக்க
தத்துவங்கள் நானுணர்ந்தேன்..!!!


அன்று பார்வைகளில் பாசம் கண்டேன்
இன்று -பார்வையிழந்து தவிக்கின்றேன்..!!

வார்த்தைகளில் வசந்தம் கொண்டேன்
இன்று- வாழ மறந்து தனியாகிபோனேன்..!!

அன்பில் ஆறுதல் அடைந்தேன்
இன்று -நீயின்றி நீரின்றி
மீனாய் துடிக்கின்றேன்…!!!
காதல் கொண்ட இதயத்தில் உனை சுமந்தேன்
கனவுகள் கொண்டு உறக்கத்திலும்
உனையே காதலித்தேன்..!!!

காலங்கள் நிறம் மாறியதோ
பெண்னே நீ இடம் மாறி போக..???

தடம் மாறிபோன என் இதயமும்
உன்னிடம் நிஜம் தேடி
தவித்து துடித்துக்கிடக்கிறது..!!!
பள்ளிக் காதல் பருவமெய்தி
பாவை உன் அணைப்பிற்காக…!!!
-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...