நம் நிலை மாற
நாளும் கூடிவர நானிங்கு
தனியாகி போகிறேன்
என் தங்கமே உன் நினைவுகளை சுமந்தபடி..!!!
வாங்கிய கடன் எல்லாம்
வரையின்றி குடித்தனம் நடத்தி
வட்டிகளை குட்டியாய்
குவித்துக்ககொள்ள
குடும்ப கட்டுபாடு செய்ய
நான் இன்று போய் வருகிறேன்
என் தங்கமே..!!!
பிறந்த நம் காதலை
வாழவைக்க நீ என்னோடு வாழ வந்தாய்
சொத்து சுகமெல்லாம்
மறந்து என் மார்பில் துயில் கொண்டாய்..!!!
தேவதையே உனை கோவில் தேராய்
ஊர்வலம் கூட்டிபோகத்தான்- நான் இன்று
போய் வருகின்றேன்..!!!
இளமை முடியும் முன் வந்துவிடுவேன்
இனிமை நாம் காணலாம்..!!
முதுமை வந்தாலும் உனை தாங்குவேன்
உயிர் போனாலும் உன் மடி சாயுவேன்..!!!
அன்று சபதம் ஏற்று
உன் கரம் சேர்த்தேன்
நம் முகமுடைத்த முகங்கள் முன்னால்
நாம் வாழ்ந்து காட்டுவோம்..!!!
தரம்கெட்டு போனதாய் சிலர் சொல்ல
நான் கேட்டேன்- உயிரே
தாரமாய் நீ வந்த பின்
தரம் கெட்டுபோகவில்லையடி
வரம் ஆயிரம் வந்து சேர்ந்ததடி..!!!
பொருத்துக்கொள்
வலிகளை மட்டுமல்ல என் காதலையும்
சேர்த்து வளர்த்துக்கொள்
நான் போய் வருகின்றேன்
போதுமடி…. கண்ணீரில் எனை நனைக்காதே
கண்மூடினாலும் உன் புன்னகை முகம்தான்
எனை தீண்டவேண்டும்..!!!
என்னையும் அழச்செய்யாதே
மழலையாய் இன்நேரம்
உன் மடிசாயச் சொல்லாதே
மறந்துபோய்விடுவேன் நான்
வலிகளையெல்லாம்…!!!
வலியோடு வழி போகிறேன்
உயிரே வாழ்க்கையில்
நாம் வெல்வோம்..!!!
கவனமாயிரு காதலோடு
போய் வருகிறேன் நான்..!!!
-பிசாசு-
No comments:
Post a Comment