Monday, February 20, 2017

நேற்றைய காதலியே.!!!

நெஞ்சம் கொண்டு  மஞ்சம் தந்து 
எனை தாலாட்டியது  நீதான்…!!! 
வரையரையோடு காதல்
பழக்கியவளும் நீதான்..!!


அப்பொழுதெல்லாம்

நிமிடங்கள் மறந்து
பொழுதுகள் கடந்து
காதல் பாஷை பேசித் தீர்த்தோம்..!!!
நினைவுகள் நீங்கி கனவுகள் வாங்கி
இரவிலும் நாம் காதல் செய்தோம்…!!!


நீதான் நான் -நான் தான் இனி நீ
என்றெல்லாம் உயிலில்லா
உறவெழுதினோம்..!!!
ஒட்டுமொத்த அன்பையும்
கொட்டித்தீர்த்து தான் 
காதல் வழி நடந்தோம்..!!!


இணையாத 
இருகோடுகள் என்றறிந்தும்
இடைவெளியுடைத்து 
இதயம் இடமாற்றி 
காதல் இம்சை கொண்டாடினோம்…!!



சகியே…!!!
அன்று எதுவோ எமை சேர்த்தது
அது தான் காதலா..??
இன்று எதுவோ நமை பிரித்தது
அது தான் மாயமோ..???


என் நேற்றைய காதலியே

நெஞ்சத்தில் மஞ்சம் தந்து
கொஞ்சி விளையாடிய பாதகியே…!!!
நாளையொரு நாள் பிறக்கலாம்
நாம் அன்றும் சந்திக்கலாம்

அப்பொழுதும நீ எனக்கு காதலியே
நான் மட்டும் உனக்கு
மறந்து போகாத நினைவாக
கூட இருப்பேனா நானறியேன்…!!!!
-பிசாசு-



No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...