Friday, April 21, 2017

உன் நினைவில்

நெடுந்தூர பயணமதில்
நீ 😍😍
துணையாக வேண்டும்

இளைபாறிட வேண்டுகையில்
உன் 😍😍
மடி எனை தாங்க வேண்டும்


முடியாததொரு
வானமாய் அது என்றும்
நீள வேண்டும்
ஒரு வேளை
அது முடிகின்ற வேளை வந்தால்
உன் மடியிலே நான்
இறக்க வேண்டும்...!!!

#பிசாசு😈😈😈😈

....................................................................................


முத்த மழை பொழியும்
மேகம் நீயடி😍😍😍
நெற்றியிலே
முதல் துளி விழ
காத்திருக்கும்
நிலம் நானடி🤔🤔🤔


#பிசாசு😈😈😈
................................................................................
உன் நிழலில் அமர்ந்தே
என் ஆயுள் கூடுதடி🤔🤔
உன் உயிரில் கலந்தே
அது நூறுஜென்மம் ஆகுதடி🤔🤔


சகியே…..


என் காதலுக்கு உன் உயிரை கொடுத்தாய்
அது உரு பெற்றதடி😍😍
என் கவிதைகளுக்கு உன் ஆயுள் கொடுத்தாய்
அது உயிர் பெற்றதடி 😍😍
என் கனவுகளுக்கு உன் நிறம் கொடுத்தாய்
அது முடியாமது தொடறுதடி😍😍
என் கண்களுக்கு உன் பார்வை கொடுத்தாய்
உலகமே உன்னால் அழகானதடி😍😍


மறுஜென்மம் ஒன்றை தந்தாய்
எத்தனை முறை நான் இறந்தாலும்
என்னோடு இறந்து
எனக்கெனவே நீயும் மறுபடியும்
பிறக்கின்றாய்😽😽😽😽


#பிசாசு😈😈😈

Tuesday, April 11, 2017

உனக்காய் உயிர்த்தவை


பேசி பேசி தீர்ந்துபோன வார்த்தைகளை
எல்லாம் சேமித்து வைத்துக்கொண்டு
தினமுறங்கி போகினறேன்
கனவுகளில் நாம் மௌனமாகிட
கூடாதென்பதற்காய்…!!!

……………………………………………………………………

கடிகார முட்கள் முடமாகி போனதாய்
இரவு பகல் ஒன்றாய் தொலைந்துபோய்விட்டதாய்
நான் பிரம்மையில் கிடக்க
உயிர் வரை ஏதோ ஒன்று ஓடித்திரிந்து
மூச்சுக்காற்றோடு முட்டி மோதி
கடத்திக்கொண்டிருக்கிறேன் என் நாட்களை
சகியே..
மாலை சூடும் வேளை வரும்
நாளை எதிர்பார்த்து….!!!

……………………………………………………………………………
இடை வளைத்து இறுகப்பற்றிய கரம்
இன்னும் வாசம் கூட்டுகிறது
இது நீ தந்த வரமா?
இல்லை வாலிபத்தின் சாபமா?
இன்னும் புரியவில்லையடி….!!!

……………………………………………………………………


சந்தித்தாகவேண்டும் என்று
நாம் சிந்தித்து திட்டங்கள்
கொண்ட போதெல்லாம் -எவர்
கண்படுகின்றதோ தெரியவில்லை
தட்டுப்பட்டே போகின்றது -நம் சந்திப்புகள்
பரவாயில்லை பெண்ணே
கொஞ்சம் கண் மூடி உறங்கிக்கொள்வோம்
இப்பொழுதே கனவில் காதல் 
மொழிபேசிக்கொள்வோம்
எவர் அங்கு எமை தடுப்பார்..!!!


…………………………………………………………………………………………

முதல் சந்திப்பில் நீ கொண்ட
புன்னகை வெட்கம்…
தடுமாறிய தடம் பதித்த வார்த்தைகள்…
இடம் மாறாது இடைநின்ற இடைவெளிகள்…
நேரெதிராய் நின்றிட மறுத்த பார்வைகள்….
இவையெல்லாம் மீண்டும்
ஒரு முறை பார்த்திட
புதிதாய் நானுனை சந்திக்க வேண்டுமடி..!!!

……………………………………………………………………

கவலைகள் எல்லா என்
மடிசாய்ந்திட சரியாகுமென
நம்புகிறாய்- சகியே
நானும் நம்பத்தொடங்குகிறேன்
உன் மடிகொடு…!!!


……………………………………………………………………

அன்பே
துன்பங்கள் மறந்து
கொஞ்சம் நான் உறங்கிட மடிகொஞ்சம்
தருவாயா???
தலாட்டி நீ தலை கோதிட
கண்ணீரில் உன் மடி நனைந்திட
விரல் சேர்த்து கண்ணீர் துடைத்து
முத்தம் ஒன்று தருவாயா தாயாய் நீ உருமாறி…!!!

-பிசாசு-






Sunday, April 2, 2017

“காதலில் நீ தானே என்றும் கிழக்கு”

என் தேடலின் 
முடிவாய் வந்தவள் நீ
நான் கலங்கிடும் வேளையில்
உன் கரங்கள்தான் ஆறுதலாய்
அணைத்துக்கொள்கிறது…!!!

வாழ்வில் என்னுடன் 
வழிகாட்டியாய்
பயணிக்கின்றவள் நீ
வாழ வழிசெய்தவளும் நீ
வானத்தில் பறக்க சிறகு
தொடுத்தவளும் நீயேதான்…!!



வலிகளை வாங்கினாய் 
சுகங்களாய் மாற்றினாய்
மனதை தேற்றினாய் 
நோய் தீர்க்கும் மருந்தாகினாய்..!!!


தாயென மாறினாய் 
தாலட்டு பாடினாய்
சேயென நான் மாற
நெஞ்சோடு எனை அணைத்தாய்..!!!

காலத்தால் சேர்தவரானோம்
கற்பனையில் மிதந்தவனானேன்
காதலை தந்தவளானாய்
வாழ்வில் பாதியானாய்..!!!
உயிரே வேறன்ன வேண்டுமடி எனக்கு
“காதலில் நீ தானே என்றும் கிழக்கு”..!!!!
-பிசாசு-




நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...