Sunday, April 2, 2017

“காதலில் நீ தானே என்றும் கிழக்கு”

என் தேடலின் 
முடிவாய் வந்தவள் நீ
நான் கலங்கிடும் வேளையில்
உன் கரங்கள்தான் ஆறுதலாய்
அணைத்துக்கொள்கிறது…!!!

வாழ்வில் என்னுடன் 
வழிகாட்டியாய்
பயணிக்கின்றவள் நீ
வாழ வழிசெய்தவளும் நீ
வானத்தில் பறக்க சிறகு
தொடுத்தவளும் நீயேதான்…!!



வலிகளை வாங்கினாய் 
சுகங்களாய் மாற்றினாய்
மனதை தேற்றினாய் 
நோய் தீர்க்கும் மருந்தாகினாய்..!!!


தாயென மாறினாய் 
தாலட்டு பாடினாய்
சேயென நான் மாற
நெஞ்சோடு எனை அணைத்தாய்..!!!

காலத்தால் சேர்தவரானோம்
கற்பனையில் மிதந்தவனானேன்
காதலை தந்தவளானாய்
வாழ்வில் பாதியானாய்..!!!
உயிரே வேறன்ன வேண்டுமடி எனக்கு
“காதலில் நீ தானே என்றும் கிழக்கு”..!!!!
-பிசாசு-




No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...