Tuesday, April 11, 2017

உனக்காய் உயிர்த்தவை


பேசி பேசி தீர்ந்துபோன வார்த்தைகளை
எல்லாம் சேமித்து வைத்துக்கொண்டு
தினமுறங்கி போகினறேன்
கனவுகளில் நாம் மௌனமாகிட
கூடாதென்பதற்காய்…!!!

……………………………………………………………………

கடிகார முட்கள் முடமாகி போனதாய்
இரவு பகல் ஒன்றாய் தொலைந்துபோய்விட்டதாய்
நான் பிரம்மையில் கிடக்க
உயிர் வரை ஏதோ ஒன்று ஓடித்திரிந்து
மூச்சுக்காற்றோடு முட்டி மோதி
கடத்திக்கொண்டிருக்கிறேன் என் நாட்களை
சகியே..
மாலை சூடும் வேளை வரும்
நாளை எதிர்பார்த்து….!!!

……………………………………………………………………………
இடை வளைத்து இறுகப்பற்றிய கரம்
இன்னும் வாசம் கூட்டுகிறது
இது நீ தந்த வரமா?
இல்லை வாலிபத்தின் சாபமா?
இன்னும் புரியவில்லையடி….!!!

……………………………………………………………………


சந்தித்தாகவேண்டும் என்று
நாம் சிந்தித்து திட்டங்கள்
கொண்ட போதெல்லாம் -எவர்
கண்படுகின்றதோ தெரியவில்லை
தட்டுப்பட்டே போகின்றது -நம் சந்திப்புகள்
பரவாயில்லை பெண்ணே
கொஞ்சம் கண் மூடி உறங்கிக்கொள்வோம்
இப்பொழுதே கனவில் காதல் 
மொழிபேசிக்கொள்வோம்
எவர் அங்கு எமை தடுப்பார்..!!!


…………………………………………………………………………………………

முதல் சந்திப்பில் நீ கொண்ட
புன்னகை வெட்கம்…
தடுமாறிய தடம் பதித்த வார்த்தைகள்…
இடம் மாறாது இடைநின்ற இடைவெளிகள்…
நேரெதிராய் நின்றிட மறுத்த பார்வைகள்….
இவையெல்லாம் மீண்டும்
ஒரு முறை பார்த்திட
புதிதாய் நானுனை சந்திக்க வேண்டுமடி..!!!

……………………………………………………………………

கவலைகள் எல்லா என்
மடிசாய்ந்திட சரியாகுமென
நம்புகிறாய்- சகியே
நானும் நம்பத்தொடங்குகிறேன்
உன் மடிகொடு…!!!


……………………………………………………………………

அன்பே
துன்பங்கள் மறந்து
கொஞ்சம் நான் உறங்கிட மடிகொஞ்சம்
தருவாயா???
தலாட்டி நீ தலை கோதிட
கண்ணீரில் உன் மடி நனைந்திட
விரல் சேர்த்து கண்ணீர் துடைத்து
முத்தம் ஒன்று தருவாயா தாயாய் நீ உருமாறி…!!!

-பிசாசு-






No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...