Saturday, October 28, 2017

கொடுமை

தீக்கொண்டழிந்தது
நஞ்சுண்டு இறந்தது
நாண் கொண்டழியுமோ
இன்னொரு பறவையின் கூட்டம்???

அத்தியாவசியங்கள் வந்தழித்தது
துரோகமும் சேர்ந்தொழித்தது
வேகமாய் மனம் நினைத்து
மானமும் மண்ணில் புதைந்து.....!

பறவைகள் பெற்றதில்
வட்டிகள் குட்டிகளிட்டதில்
அழிந்தன குஞ்சுகள்
பாவம் செய்ததும்
ஏமாற்றம் கொண்டதும் என்னவோ
குஞ்சுகளின் பறவைகள்....!

ஏன் இந்த கொடுமைகள்???
எதற்காக இந்த தற்கொலைகள்.???

ஆடம்பரங்களுக்கு அடிமையாகி
ஆசைகள் கொண்டழிந்து
பேராசைகளில் உயிர் இழக்கும்
மனங்களாய் மனித மனங்கள்
மாறியதாலோ

தேவைகள் எதுவென்று
அறிந்து தீர்க மறந்து
தேவையில்லா
ஆடம்பரங்களில் விழுந்து
அழிந்து போவதினாலோ...????

பிசாசு

Wednesday, October 25, 2017

தயவு செய்து வேண்டாம்

காதலை முறிக்காதீர் அது ஒன்றும்
மரக்கிளை அல்ல..
காதலை எறிக்காதீர் அது என்றும்
பழைய காகிதம் அல்ல..
காதலை தூற்றாதீர் அது ஒன்றும்
தவறான வார்த்தை அல்ல…
காதலை கசக்காதீர் அது ஒன்றும்
எழுத்துப் பிழையல்ல..
காதலை புதைக்காதீர் அது என்றும்
உயிரற்ற உடல் அல்ல…
காதலை மறுக்காதீர் அது ஒன்றும்
ஜாதி மதம் அல்ல…
மறந்தும் கூட காதலை
விலை பேசாதீர்- அது வியாபார சந்தையல்ல…!!!

உணர்வுகள் உணர்சிகள் கொண்டு
கருவுற்று காதலில் இணைந்த இதயங்களை
பொருள் பணம்  அந்தஸ்து கொண்டு
அறுத்துவிடாதீர்கள்


அறுத்துவிட்டு அழகு பார்க்க
காதல் ஒன்றும் தொப்புள்கொடி உறவல்ல..!!!
_பிசாசு_

Tuesday, October 24, 2017

கரை தொடும் அலையாய்
தரை தொடும் சருகாய்
உனை நான் தீண்டுகையில்
நானமதில் நீ உறைவாய்
பின் என் மார்தனில் 
துயில் கொள்வாய்..!!!


-பிசாசு-😈😈😈
............................................................................................................
எனை நான் மறந்து உனைதான் 
நினைக்கையில்
இதயம் இரண்டாகி துடிப்பதாய்
உணர்கின்றேன்

-பிசாசு-
😈😈😈
................................................................................................................
மௌனங்களையும்
கவிதையாக்கிட பழகினேன்
உன்னால்தான்
-பிசாசு-
😈😈😈

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...