காதலை முறிக்காதீர் அது ஒன்றும்
மரக்கிளை அல்ல..
காதலை எறிக்காதீர் அது என்றும்
பழைய காகிதம் அல்ல..
காதலை தூற்றாதீர் அது ஒன்றும்
தவறான வார்த்தை அல்ல…
காதலை கசக்காதீர் அது ஒன்றும்
எழுத்துப் பிழையல்ல..
காதலை புதைக்காதீர் அது என்றும்
உயிரற்ற உடல் அல்ல…
காதலை மறுக்காதீர் அது ஒன்றும்
ஜாதி மதம் அல்ல…
மறந்தும் கூட காதலை
விலை பேசாதீர்- அது வியாபார சந்தையல்ல…!!!
உணர்வுகள் உணர்சிகள் கொண்டு
கருவுற்று காதலில் இணைந்த இதயங்களை
பொருள் பணம் அந்தஸ்து கொண்டு
அறுத்துவிடாதீர்கள்
அறுத்துவிட்டு அழகு பார்க்க
காதல் ஒன்றும் தொப்புள்கொடி உறவல்ல..!!!
_பிசாசு_
"நிஜங்களின் நிழல்களில் ஒட்டிக்கொண்ட கறும்மை எடுத்து இரவுகளில் கண்விழித்து கதறிதிரியும் பிசாசுவின் பிதற்றல்கள் இந்த கவிதைகள்" -பாலகிருஷ்ணன் சந்ரு-
Wednesday, October 25, 2017
தயவு செய்து வேண்டாம்
Subscribe to:
Post Comments (Atom)
நீ
மனதை உருக்கி மாயங்கள் செய்யும் மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து ஆழம் பார்க்கும் மோசக்காரியும் நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...

-
எதை இழந்து தேடினாலும் நீயே கிடைக்க பெறுகிறாய் எது தொலைந்து போனாலும் உன்னாலேயே களவாடப்படுகிறது எவை மறக்கப்படுகிறதோ அவைள் அணைத்...
-
மூச்சுக்கு முன்னூறுதடவை என் பெயர் உச்சரித்தவள் இன்று ஒரு பேச்சுக்கு கூட என் பெயர்க்கொண்டு அழைக்க மறுக்கின்றாள் என்னை மறந்துபோன என் காதலை ம...
-
நீ இல்லாத நாட்கள் வாசமில்லா பூக்களாய் என் நந்தவனம்..!!! வெளிச்சமற்ற விண்மீன்களின் ஊர்வலமாய் எந்தன் வானம்..!!! நீ இல்லாத நாட்கள் உறங்காத கண்...
No comments:
Post a Comment