Saturday, October 28, 2017

கொடுமை

தீக்கொண்டழிந்தது
நஞ்சுண்டு இறந்தது
நாண் கொண்டழியுமோ
இன்னொரு பறவையின் கூட்டம்???

அத்தியாவசியங்கள் வந்தழித்தது
துரோகமும் சேர்ந்தொழித்தது
வேகமாய் மனம் நினைத்து
மானமும் மண்ணில் புதைந்து.....!

பறவைகள் பெற்றதில்
வட்டிகள் குட்டிகளிட்டதில்
அழிந்தன குஞ்சுகள்
பாவம் செய்ததும்
ஏமாற்றம் கொண்டதும் என்னவோ
குஞ்சுகளின் பறவைகள்....!

ஏன் இந்த கொடுமைகள்???
எதற்காக இந்த தற்கொலைகள்.???

ஆடம்பரங்களுக்கு அடிமையாகி
ஆசைகள் கொண்டழிந்து
பேராசைகளில் உயிர் இழக்கும்
மனங்களாய் மனித மனங்கள்
மாறியதாலோ

தேவைகள் எதுவென்று
அறிந்து தீர்க மறந்து
தேவையில்லா
ஆடம்பரங்களில் விழுந்து
அழிந்து போவதினாலோ...????

பிசாசு

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...