Sunday, October 21, 2018

காதல்..!!!

காதல் ஒரு கைக்குழந்தை 
வா என்று கை நீட்ட 
ஓடிவந்து ஒட்டிக்கொள்ளும்..! 

நினைக்கும் போது 
வலியாகவும் 
மறக்கும் போது 
நினைவை கூட்டும் வழியாகவும் 
தொடர்கின்ற பயணம்..!!! 

இளமையின் உயிர்பின் 
இதயத்தின் தீண்டல் 
உயிரின் வார்ப்பில் 
ஜென்மத்தின் தேடல்..!!! 

கனவுகளின் பிரசவம் 
கவிதைகளின் வசம் காதல்...!!! 
கண்கள் வளர்க்கும் 
அருசுவை அமிர்தம் 
இதழ்கள் சுவைக்கும் 
கசப்பு தீணி..!!! 

அவள் எழுதும் எழுத்து 
இவன் வாசிக்கும் வரிகள்..!!! 

ஊசி முனையின் அழுத்தம் 
வெண்பஞ்சின் வருடல்..!!! 

காதல்..!!! 
ஓற்றை இருளுக்குள் 
பொருள் தேடுவதல்ல 
காதல் 
உயிருக்குள் உயிர் தேடுவது..!!!

-பிசாசு-
 

மழலை



மயக்கும் ரீங்கார பொன்வண்டு போல்
மழலை சிரிக்க -மனதில் சுரக்கும்
அமுதாய் தேன் சொட்டு..!!!

கவலைகளை எல்லாம்
நொடிப்பொழுதில்
மறந்திடச் செய்யும் மந்திரம்
உயிர் கொடுத்தவள் சோர்ந்திருக்க
புன்னகைக்க வைத்திடும் தந்திரம்..!!!

அழகு முகத்தின் அடையாள சின்னம்
மழலை சிரிப்பு- இடம் பொருள் பாராது
அனைத்திட தோன்றும் தினம் தினம்..!!!

உலகத்து மொழிகளெல்லாம்
மொளனமாய் மொழிபெயர்க்க
மழலை மொழி போதுமே
புது புது பாஷைகளும் வழி பிறக்க..!!!

காணத கடவுளை காண
கண்கோடி தேவையில்லை
கண்டுவிட்டால் போதும்
மழலையின் சிரிப்பை
அந்த சொர்கமே கைவந்து சேரும்..!!!!




-பிசாசு-

 


சகியே..!!!

அம்பொன்று 
தேவையில்லையடி
இதயத்தை தாக்கி -என்
நிலை தடுமாறிட..!!!

வம்பென்று நான் செய்யும் 

குறும்புகளையெல்லாம்
நீ உன் அன்பினிலே 

தண்டித்தால்
போதுமடி..!!!

கோபம் கொள் பரவாயில்லை
மௌனமாய் நீ 

என்னை கடக்காதே
தடம் மாறிபோய்விடுகின்றேன் 

நான்..!!!

-பிசாசு-


நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...