காதல் ஒரு
கைக்குழந்தை
வா என்று கை நீட்ட
ஓடிவந்து ஒட்டிக்கொள்ளும்..!
நினைக்கும் போது
வலியாகவும்
மறக்கும் போது
நினைவை கூட்டும்
வழியாகவும்
தொடர்கின்ற பயணம்..!!!
இளமையின் உயிர்பின்
இதயத்தின் தீண்டல்
உயிரின் வார்ப்பில்
ஜென்மத்தின் தேடல்..!!!
கனவுகளின் பிரசவம்
கவிதைகளின் வசம் காதல்...!!!
கண்கள் வளர்க்கும்
அருசுவை அமிர்தம்
இதழ்கள் சுவைக்கும்
கசப்பு தீணி..!!!
அவள் எழுதும் எழுத்து
இவன் வாசிக்கும் வரிகள்..!!!
ஊசி முனையின் அழுத்தம்
வெண்பஞ்சின் வருடல்..!!!
காதல்..!!!
ஓற்றை இருளுக்குள்
பொருள் தேடுவதல்ல
காதல்
உயிருக்குள்
உயிர் தேடுவது..!!!
-பிசாசு-
"நிஜங்களின் நிழல்களில் ஒட்டிக்கொண்ட கறும்மை எடுத்து இரவுகளில் கண்விழித்து கதறிதிரியும் பிசாசுவின் பிதற்றல்கள் இந்த கவிதைகள்" -பாலகிருஷ்ணன் சந்ரு-
Sunday, October 21, 2018
Subscribe to:
Post Comments (Atom)
நீ
மனதை உருக்கி மாயங்கள் செய்யும் மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து ஆழம் பார்க்கும் மோசக்காரியும் நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...

-
எதை இழந்து தேடினாலும் நீயே கிடைக்க பெறுகிறாய் எது தொலைந்து போனாலும் உன்னாலேயே களவாடப்படுகிறது எவை மறக்கப்படுகிறதோ அவைள் அணைத்...
-
மூச்சுக்கு முன்னூறுதடவை என் பெயர் உச்சரித்தவள் இன்று ஒரு பேச்சுக்கு கூட என் பெயர்க்கொண்டு அழைக்க மறுக்கின்றாள் என்னை மறந்துபோன என் காதலை ம...
-
நீ இல்லாத நாட்கள் வாசமில்லா பூக்களாய் என் நந்தவனம்..!!! வெளிச்சமற்ற விண்மீன்களின் ஊர்வலமாய் எந்தன் வானம்..!!! நீ இல்லாத நாட்கள் உறங்காத கண்...
உண்மையில் உங்கள் கவிதைகள் எல்லாம் சிறப்பு. எளிய தமிழ், அழகான வரிகள், அழகாக வடிவமைத்துள்ளீங்கள்.
ReplyDelete