Wednesday, January 23, 2019

தொல்லையாகி
போவதனாலா-எனை நீ
நகர்ந்திருக்தான் சொல்கிறாய்

விலகி இருக்கவா..???
விலகாதிருக்கவா..???
தொலைந்து போகவா..???
-பிசாசு-

காதல் எதிரிகளே..!!

நன்றிகடன் பட்டுவிட்டேன்
உங்கள் நா இறைக்கும்
வார்த்தைகளுக்கு

நினைவில் நிறுத்திக்கொள்ளுங்க
மனம் மாற்றி இடம் மாற்ற
நீங்கள் விதிக்கும் வியூகங்கள் எல்லாம்
வீணாய் போய்விடலாம் ஒருநாள்..!!!

சிறு துளியில் உருவாகி
உடல் கொண்ட மனிதரெல்லாம்
உயிர்கொண்டு வாழ தேவையொன்று
உண்டு- அது அன்பென்று வேறெது??
அன்பிலே உருவான
காதல் ஏன் இன்று
தீண்டாமையானது???

நீங்கள் எழுதிய சாசனத்தில்
காதல் வசனத்தில்
காதலின் தகுதி என்ன பணமா??
ஜாதிக்கு முதலிடமா??
வசதிக்கு கட்டாய ஒதுக்கீடா??
கௌரவத்திற்கு என்றொரு சிம்மாசனமா??
இவைதான் உங்கள் பார்வையில் காதலென்றால்
அன்புக்கு மட்டும் அங்கு அறைகுறையா???



காதலை மனம்விட்டு பிரிப்பதும்
ஓர் உடலை கூட்டமாய் நின்று
அம்மணமாக்கி பார்பதுமொன்றே
உங்களுக்கு அது ஓருவித சுகமாகலாம்
காதலித்த இதயத்திற்கு அது ரணம் தான்…!!!


பிரித்துவைத்து சிரிக்கின்றீர்கள்
வெறுத்து போகவே நினைக்கின்றீர்கள்
மறந்து வாழ சொல்கின்றீர்கள்
மனம் மாற்றிட துடிக்கின்றீர்கள்
மறு மணம் எற்க கட்டாயடுத்துகின்றீர்கள்..!!!



என் வம்புக்குறிய

காதலின் எதிரிகளே...!!!
உங்களுக்கு என் நன்றிகள்
எங்கள் காதலின் அழவை
உணர்த்திவிட்டமைக்கு
புனிதமதை புரியசெய்தமைக்கு
இதயம் இரண்டை இன்னும் அதிகமாய்
காதலிக்க தூண்டியமைக்கு..!!!

ஒன்று சொல்கிறேன் கேளுங்கள்

எவை என்ன செய்தாலும்
எனைவிட்டு அவளும் என்னவளும்
அவளின்றி நானும் அவளானவனும்
உறுதியாய் ஓர் வழிகொண்டோம்
சேர்ந்திருப்போம் தனியாய்
காதல் சுமந்திருப்போம் உயிராய்..!!

-பிசாசு-

நான் என்றும் நீ தான்

என் இரவோடு நான் காணும்
கனவுகளும் நீ தான்

என் இரு கண்ணில் தோன்றும்
ஒரு காட்சியும் நீ தான்

என் வார்த்தைகளில் பிறக்கின்ற 
வலிமையும் நீ தான்

என் மௌனத்தில் உருவான 
அமைதியும் நீ தான்

என் மொழிகளில் வாழ்கின்ற 
தொன்மையும் நீ தான்

என் வழியில் பூக்கின்ற 
பூக்களும் நீ தான்

என் வாழ்வில் வந்த 
வசந்தமும் நீ தான்

விரல் பிடித்து நடந்த
 குழந்தையும் நீ தான்

அடம்பிடித்து இடம்பிடித்த 
இம்சையும் நீ தான்

என் நெஞ்சில் ஒரு கணம் அக்கினியாய்
சுட்டவளும் நீ தான்

மறுகணமே பக்கதில் வந்து 
முத்தமிட்டவளும் நீ தான்

காதல் காட்டியவளும் நீதான்
என்னில் காயங்கள் 
கூட்டியவளும் நீ தான்

நான் என்றும் நீ தான்
நீயென்றும் நான்தான்

இறுதிவரை என்றும் நாம் “காததலில்” தான்..!!!

-பிசாசு-
 

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...