Wednesday, January 23, 2019

நான் என்றும் நீ தான்

என் இரவோடு நான் காணும்
கனவுகளும் நீ தான்

என் இரு கண்ணில் தோன்றும்
ஒரு காட்சியும் நீ தான்

என் வார்த்தைகளில் பிறக்கின்ற 
வலிமையும் நீ தான்

என் மௌனத்தில் உருவான 
அமைதியும் நீ தான்

என் மொழிகளில் வாழ்கின்ற 
தொன்மையும் நீ தான்

என் வழியில் பூக்கின்ற 
பூக்களும் நீ தான்

என் வாழ்வில் வந்த 
வசந்தமும் நீ தான்

விரல் பிடித்து நடந்த
 குழந்தையும் நீ தான்

அடம்பிடித்து இடம்பிடித்த 
இம்சையும் நீ தான்

என் நெஞ்சில் ஒரு கணம் அக்கினியாய்
சுட்டவளும் நீ தான்

மறுகணமே பக்கதில் வந்து 
முத்தமிட்டவளும் நீ தான்

காதல் காட்டியவளும் நீதான்
என்னில் காயங்கள் 
கூட்டியவளும் நீ தான்

நான் என்றும் நீ தான்
நீயென்றும் நான்தான்

இறுதிவரை என்றும் நாம் “காததலில்” தான்..!!!

-பிசாசு-
 

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...