Sunday, February 10, 2019

எது எமை கடந்து போயினும்
எது எமை மறந்து போயினும்
எதில் நம் உரிமை இழந்து போயினும்
எதில் நம் உணர்வு இறந்து போயினும்


அவமானங்கள் அணிவகுத்து
தகுதிகள் எதுவென்று விரல் நீட்டி
கேள்விகள் கேட்பினும்..!!!

ஒன்றை மட்டும் நீ மறந்துவிடாதே
உனக்கு நீயே உரிமை
உனக்கு நீயே உணர்வு
உனக்கு நீயே உறவு
உன் புன்னகையே
அதற்கு பதில்..!!

-பிசாசு-
நீ இல்லை என்ற பின்
நிஜம் என்னடி
நிழல் என்னடி
நினைவிலும் தீயடி..!!


நான் இல்லை என்ற பின்
நலம் இல்லையடி
நாம் இல்லையடி
நாவிலும் மௌனமடி..!!

காதல் இல்லை என்ற பின்
கனவென்னடி
கதையென்னடி
கவிதைகளிலும் வலிதானடி..!!


-பிசாசு-

Saturday, February 9, 2019

உனக்கும் எனக்கும் 
தாய்மொழி ஒன்றுதானே 
தொணிகள் வேறானபோதும்…!!! 

உனக்கும் எனக்கும் 
ஏக்கங்கள் ஒன்றுதானே 
காரணங்கள் வேறானபோதும்….!!!! 

உனக்கும் எனக்கும் 
நாடு ஒன்றுதானே 
ஊர்கள் வேறானபோதும்..!!!! 

சகியே… 

நீயும் நானும் 
வேறு வேறுதான் 
இருந்தும் 
வேர் ஒன்றுதான் 
அது காதல் தானே..!!

-பிசாசு-

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...