Wednesday, June 24, 2020

நான் வரைந்த ஓவியம்


வண்ணங்கள் கொண்டென்னை
நானே வரைந்துப் பார்த்தேன்
சுவரெல்லாம் அழுக்குகள்..!!

தூரமாய் சென்றெந்தன்
பார்வைகளை நோக்கினேன்
கண்கள் எல்லாம் பல குரோதங்கள்...!!

ஓரமாய் நின்றெந்தன்
உதடுகளை வருடினேன்- என்
விரல்கள் எல்லாம் 
பொய்மையின் தழும்புகள்...!!

மௌனமாய் நகர்ந்தெந்தன்
மார்பினில் சாய்ந்தேன்
செவியெல்லாம் 
துரோகங்களின் கூக்குரல்கள்..!!

வேகமாய் விலகியெந்தன்
தேகத்தின் அருகில் நின்றேன்
சுவாசமெல்லாம் 
பாவங்களின் வாடைகாற்று..!!

பாவமாய் குணிந்தெந்தன்
இடையினை தழுவினேன்
கரங்கள் இரண்டிலும் 
இச்சைகளில் பிசுபிசுப்புகள்..!!

சோகமாய் அமர்ந்தெந்தன்
பாதங்களை தாங்கினேன்
உள்ளங்கைகளிலே 
இழப்புகளின் சுவடுகள்..!!

வெறுப்போடு எழுந்து நான்
காரி உமிழ்ந்தேன் 
சித்திரத்தின் மீது-ஆனால் 
ஈரமாகிப்போனதென்னவோ
என் முகம்தான்..!!

ஆமாம் இதுவரை
அழுக்குகளின் மீதே நான்
அழகு பூசி திரிந்திருக்கின்றேன்..!!

சித்திரத்தை அழித்துவிட்டு
அமைதியாய் கடந்து போகிறேன்
சுவருக்கு நன்றி சொல்லி..!!

முடிந்தால்
நீங்களே உங்களை
வரைந்துபாருங்கள்
நீங்கள் அழகா???
அழுக்கா??? என்று தெரியும்..!!

-பிசாசு-











Wednesday, June 10, 2020

அன்பினால்..


முனைகளின் கூர்மையினால்
குத்துகின்ற வலிகளையெல்லாம்
வார்த்தைகளாக்கி
நிறமூட்டி நிஜம் காட்டும் தாள்களும்
காதலித்துக்கொண்டுதான் இருக்கின்றது
எழுத்தாணிகளை .!!!

எண்ணங்கள்
எவையானபின்பும்
அழுத்தங்கள் வலிக்கின்றபோதும்
மௌனமாயிருந்து
குருதியில் உறைந்து -தானும்
காதலித்துக்கொண்டுதான் இருக்கின்றது
தாள்களை எழுத்தாணிகள்..!!!

பெண்மையாய் பேனைகள்
மென்மைகொள்ளாத போதெல்லாம்
அழுத்தும் கூர்மையின் வலியையும்
கூட வாங்கிகொள்கின்றது
நகழ்களாக..!!!

பிழையென ஆனபின்பும்
கசக்கியெறியும் போதெல்லாம்
குப்பைத்தொட்டிக்குள்
கட்டிப்புரண்டு
சல்லாபம் தீர்க்கின்றது
எழுத்துப்பிழைகளோடு
தாள்கள்..!!!

சரியென ஆகி
மூடிவைக்கின்ற போதெல்லாம்
மடிசாய்ந்து
உடலுரசி உள்ளம் குளிர்ந்து
தாம்பத்தியம்கொள்கின்றது
தாள்களோடு
எழுத்துக்கள்..!!!


எத்தனை பிழைகள்
எண்ணிலடங்கா குறைகள்
அத்தனையும் வருகின்ற போதெல்லாம்
அந்நியோன்னியத்தின்
அழங்கரிப்புக்களாலே
தாழ்களும் எழுத்தாணிகளும்
முழுநிறைவாய் எழுத்துக்களை
பிரசவிக்கின்றன..!!!

ஆம்
எழுதிய புத்தகங்களும்
கிழித்து கசக்கி எறியும்
பக்கங்களும்
குடித்தனம் நடத்திக்கொண்டுதான்
இருக்கின்றன
மௌனமாய்..!!!

-பிசாசு-



திருமணமெனும் ஒரு தருணம்


இரு வேறு மனம்
இரு வேறு குணம் 
வெவ்வேறு கனவும் 
ஒன்றாய் இணைந்திடும் தருணமது..!!!

காதலித்த காலங்கள்
கடந்து ஓர் கரைதொட்டு
புது வாழ்வொன்றில்
காலடி பதிக்கும்
நாளது..!!!

உறவுகள் பல கூடி ஒருபுறம்
சொந்தங்கள் சில சேர்ந்து மறுபுறம்
நட்பூக்களின் நகையாடல் ஒரு புறம்
மழலைகளின் சந்தங்கள் மறுபுறமென
நாற்புறமும் மகிழ்ச்சியில்
திளைக்கும்
நிகழ்வது..!!!

யாருக்கு யரென தெரியாத
ரகசியங்கள் உடைப்பட்டு
நீதான் நானென்று
நான் தான் நீயென்று
கடவுள்போட்டதொரு முடிச்சென்று
கையெழுத்திடும்
வைபவமது..!!!

மருதாணி கோலமிட்டு
உடல் மறைத்து பளிங்காய்
ஆடைகளுடுத்தி
மணவறையில் மனமிரண்டும்
உடலொன்றாய் உறசிக்கொள்ளும்
தருணமது..!!!

மாலைகள் ஒவ்வொன்றாய்
இடம் மாறி
தாலியாய் ஒரு அடையாளம்
அவளுக்காய்...
மெட்டியாய் இன்னொரு அடையாளம்
இவனுக்காய்...
ஆனந்த கண்ணீரில்
அபிஷேகம் செய்திடும்
நேரமது...!!!


அழகுக்கழகு சேர்த்து
பேரழகாய் உருமாற்றி
நகைகள் பல சேர்த்து
புன்னகையால் தேரழகாக்கி
புகைபடமெனும்
சேமிப்பில் பதியும்
நினைவது..!!!


ரசித்து ருசித்து
பல விருந்துகள் செய்து
நவரசம் சேர்த்து
வந்தவரெல்லம் வயிறாரி
மனமுவந்து
மணம் நிறைந்து
வாழ்த்துக்கள் சொல்லும்
நாளது..!!!

களைப்பினில் விழுந்து
ஆடைகள் கசங்கி...
கலவி முடிந்து வரும் 
பெருமூச்சாய்
ஒரு மூச்சிவிட்டு..
முகம் பார்த்து...
சாதித்த சந்தோஷத்தில்
வாழ்வின் உச்சம் தொடும்
தருணமது..!!!

இப்படியான
நாளொன்றினை கடந்திடாத
மனங்களும் பல உண்டு..!!!

திருமணம் என்பதே
இருமணம்சேரும்
ஒருநாளென்பதை மறந்து
வாழ்வினை தொலைத்த
மனிதர்களும் கூட
பல உண்டு..!!!


ஜாதி மதமென்று
வசதி வாய்பென்று
பல கதைகள் கூறி
மனங்களை பிரித்து
ரணங்கள் சேர்த்து மரணத்தின் பின்
புத்திதெளிந்த உள்ளங்களும்
இங்குண்டு..!!!

திருமணம் என்பது
ஆடம்பரத்தில் இல்லை
என்று உணரும் மனங்களும்
வாழ்ந்துகொண்டுதானிருக்கின்றன
தனிமையில் உறவுகள் எல்லாம்
உதறிதள்ளிய போதும்..!!!

எது எப்படியான போதும்
திருமணம் என்பது எல்லோருக்கும்
வாய்பதில்லை..!!!
-பிசாசு-

தீராத காதல் நீ அன்பு..!!

அன்பு உன்னோடு
கைகோர்த்து நடை பயில 
வேண்டுமடி...!
அன்பு உன்னோடு
காதல் மொழி பேசி காலம் மறக்க வேணடுமடி...!

அன்பு என்னில் 
உயிர் காதல்  நீ கொள்ள 
வேண்டுமடி..!
அன்பு என்னில் 
பித்தாகி எனை நீயடிமையாக்க வேண்டுமடி...!

அன்பு உனை 
அள்ளியெடுத்து செல்லம் 
கொஞ்சிட வேண்டுமடி....!
அன்பு உனை
மெல்ல அணைத்து 
முத்தங்கள் நான் பதித்திட
வேண்டுமடி...!

அன்பு உன்னில்
என் விரல்கொண்டு கவிதைகள் பல 
கிறுக்கிட வேண்டுமடி.....!
அன்பு உன்னில்
மெய்மறந்து தலை தாழ்த்தி 
உறங்கிட வேண்டுமடி...!

அன்பு உனக்குள் 
நான் நீயென கலந்திட 
வேண்டுமடி...!
அன்பு உனக்காகவே
வாழ்ந்து இறந்திட 
வேண்டுமடி..!

இன்றில்லை யென்றால் என்னடி
என்றேனுமோர் நாள் 
ஏதேனுமோர் ஜென்மம்
வாழ்வோம் நாமடி...!!!!
  
 -பிசாசு-


நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...