Tuesday, January 24, 2017

விதிவிலக்கா..!!!

காதல் தாகம் தீர்பாயென்று
தாகத்தில் தவித்தேன்
நீரூற்றாய் நீ வந்து தீர்த்தாயடி
காதல் தாகம்..!!!

உனை சேரவேண்டித்தான் 
தினம் நான் கொண்டேன் 
கவிதையில் யாகம்
நீ வந்து தந்தாயடி ஒரு காதல் வரம்..!!!

காலை பணியில் 
குளித்த மலர்களைளெல்லாம்
களவாடி தந்ததென்னவோ
உன் வெட்கத்தின் முடிவில் நான் 
விக்கி தவிப்பதற்காகதான்..!!!


சொர்கத்தையே தந்தாயடி
உன்னொரு வார்த்தையில் -என் 
வாழ்க்கையில் காதலை தந்து… 
திக்கித் திலைத்து திரிந்தேனடி நான்..!!!


காற்தடங்கள் சேரத்தான் காதல் நடை பழகினோம்
ஊரடங்கும் வேலையிலும் காதல் மொழி பேசினோம்
தடைகளையெல்லாம் உடைத்து காதல் வழி நடந்தோம்
உயிர் வரை சென்றா நாமின்று 
காதல் வலி பொருத்தோம்..???


சகியே…!!!!
பட்டாம் பூச்சிகள் ரசிப்பாயென்று
பூக்களை வளர்த்தவன் நான்..!!!
வானவில் உடுத்த வா என்று
மழையில் நனைந்தவனும் நான் தான்..!!!
மழலை மொழி பிடிக்குமென்பதால்
வார்த்தைகள் தொலைத்தவனானேன்
காலத்தை வெறுப்பதனால்தான்
காதலை தொலைத்தவனாகிபோவேன்..!!!


விதியென்று சொல்லி 
விலகி நீ நிற்க
தொட்டவளை நெஞ்சில் காதல் அம்பு 
விட்டவளை
எட்ட நின்றாவது ரசிக்கதான் தோனுகிறது
“உன் ஆழமான காதலை”


தனிமையை ஏற்று இனிமையை உருக்கி
நான் நமக்காய் செய்யும் யாகத்தில்
நானே தீயாய் போனாலும்
தேவதையே உனை மட்டும்
மறந்து போவேனென்று நினைக்காதே
சாம்பலாயானாலும்…!!!!

-பிசாசு-










No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...