கடந்து போகிறது கண்ணீர் கோடுகள்
சேருமிடம் தெரியாது…!!!
உடல் விட்டு உயிரற்று
காற்றாகிப்போகிறது காதல்
உன் மனம் புரியாது…!!!
எனை விட்டு இதயம் தாழிட்டு
இடம் மாறி போகிறாய் நீ
என் வலி உணராது…!!!
உனை தொட்டு என்னுயிர் எடுத்து
பின்னாலே நிழலாகி வருகிறேன் நான்
உன் காதல் மறவாது..!!!
இரவோடு உறவாகி
கனவோடு தினம் கூடி நானும் நீயும்
நிதம் வாழ்ந்த நினைவுகளை
இரவுகள் மறந்துபோனாலும்
கனவுகளிலும் நினையேன்
‘’உனை மறந்து புது வாழ்வொன்று
நான் கொள்ள…”
No comments:
Post a Comment