Sunday, March 19, 2017

காத்திரு

எதைச் சொல்லி
வேண்டுமானாலும்
எனை விட்டு உனை பிரிக்க
முயற்சிக்கலாம்
உன் வீட்டார்- என் காதலை காட்டி
நான் உனை மீட்பேன்..!!

பணம் நீட்டி
மனம் மாற்றி
மானம் காத்திடு என்று
எனை மறக்க செய்யலாம்- நீ
கண் மூடி எனை நினைத்து
அவர் முன்னே திறந்துபார்
விழி தாண்டி
உடல் சென்று  உன் இதயத்தில்
நான் மட்டும் தானிருப்பேன்..!!!

வருகின்ற வலியெல்லாம்
ஏற்று காத்திருப்போம்
படி தாண்டி போகாமல் 
பார்த்திருப்போம்

வாழ்வில் இணைய முடியாது 
போனாலும்
மரணித்திலாவது நாம் 
சேர்ந்திடுவோம்

யார் வந்து தடுப்பார்
எமை அங்கு பிரிப்பார்
பணம் பதவி ஜாதி என்று
எதை நீட்டி  தடுப்பார்..!!!
-பிசாசு-

Friday, March 17, 2017

ஆறுதலுக்கு நம் காதல்

காதல் வலி பொருத்தோமடி
நாம் கண்ணீரில் 

தீக்குளித்தோமடி…
எதிர்பார்புகள் 
வில்லாய் விரிந்ததோ..???
எதிர்ப்புகள் அம்பாய் 

எமை துளைத்ததோ..???

சகியே..


கனவுகள் உடைபெறலாம்
காட்சிகள் குருடாகளாம்
இரவுகளும் கூட இரத்தம் சிந்தலாம்
இதயம் மட்டும் 

ஊனமாகுமா..???
நம்மில் வாழும் காதல் மட்டும் 

சாகுமா..???

எனக்காக நீ
உனக்காக நான்
நமக்காக நம் காதலிருக்க
கவலைகள் ஏனடி -என் 
கண்மணியே..!!!
காலங்கள் மாறுமடி
நம் மணவரை கோலம் காணுமடி..!!
எதிர்தவரெல்லாம் எமை ஏற்பாரடி
அவர்களின் வாழ்த்துக்களோடு 
நாம் வாழ்வோமடி…!!!

உயிரே...!!!

எண்ணங்களில்
அலைமோதிக்கொள்ளாதே
எம் எதிர்காலத்தில் 
கரைசேர அவை தேவை..!!!!


கண்ணீரை வீணாக்காதே
அதை சேமித்துக்கொள்
உன் பிரசவ வலிக்குத் தேவை..!!!

கண்ணங்கள் துடைத்து
சிவக்க வைக்காதே
அது என் முத்தத்தின் முடிவில்
உன்  வெட்கத்தில் 
சிவக்க வேண்டும்…!!!!

உடலை 
வருத்திக்கொள்ளாதே
என் அனைப்பில் -நீ 
சாய்ந்திருக்கும் காலம்
வெகு தூரமில்லை…!!!


கனவுகளை 
மறந்துவிடாதே
இரவுகளில் உன் மார்பில்
நான் உறங்க வேண்டும்…!!!

வார்த்தைகளை 
தொலைத்துவிடாதே
உன் தாலாட்டில் நான்
கண்ணுறங்க வேண்டும்...!!!

எது நடந்தாலும்
நமக்கான உறவுகளை 
மறந்துவிடாதே
நம் பிள்ளையை கொஞ்சுவதற்கும்
அவர்கள் உடன் இருக்க வேண்டும்…!!!

சகியே…!!!

விரதங்கள் கொள்ளாதே
நீ ரசித்து ருசிக்க
நம் காதல் தவம் கிடப்பதை
மறவாதே…!!!


எதிர்புகள் ஏறாழம்
எவை என்ன செய்துவிடும்
நானுனக்குள்ளும் நீ எனக்குள்ளும்
வாழும் போது…!!!!
-பிசாசு-




Friday, March 10, 2017

அன்பால் நனைத்துவிடு

அதிகாலை முதல் 
அந்திசாயும் வரை
வாசற்படி நின்று- தெருவோரமாய்
உனை தேடியே பார்வைகள் தவம் கிடக்க…
குளிர்கால காற்றாய் 
பௌரணமி நிலவாய்
நீ வந்துபோக கடவுள் கண்ட சொக்கனாய்
வார்த்தை மறந்து போகின்றேனடி நான் சகி..!!!

தூரமாய் எனை கடந்து நீ போய்
ஓரமாய் நின்று எனை நோக்க
சொக்கியே போனது என் மனதும்..!!!

தாகமாய் இருக்கும் என்னில் 
மேகமாய் பொழிந்து
தாகம் தீர்ப்பதந்த ஒரு நொடி 
ஓரப்பார்வை மட்டும்தான்..!!!

போதுமடி உயிரே..!!!
பார்வைகள் தாண்டி
வெட்கம் உடைத்து சொல்லிவிடு
காதலை..!!!

உன் இடைபிடித்து பின்னே 
குழந்தையாய்  நான் தொடர 
தடைகள் தகர்த்து 
குடைகள் விலக்கி
நனைத்துவிடு அன்பால் என்னை…!!!

-பிசாசு-

Sunday, March 5, 2017

நீயில்லாத பொழுதுகளில்…

விடியும் பொழுதும் உன்னோடு
முடியும் மாலையும் உன் நினைவோடு
தொட்டுச்செல்லும் காற்றும் உன் பரிசத்தோடு
பட்டுத்தெறிக்கும் நீர் குமிழும்
உன் அழகோடுதான் என -என் நிமிடங்கள்
கடந்துபோகின்றதடி சகியே..!!!


சின்ன சின்ன சண்டைகள் கூட
சுகங்களாக நமக்குள் ஆறுதலுக்கு
அன்னையாக நீ மட்டும்தான்
இன்று எனக்குள்..!!!

ஒவ்வொரு வைகறை பொழுதையும்
நான் வாரியனைத்து புது நாட்களாய் மாற்றியது
நீ என்னோடு இருக்கும் நாளிகைகளுக்காகத்தான்..!!!

நான் பசியாற மறக்கும் போதெல்லாம்
நீயேதான் வந்தாய் நிலா சோறாக…!!!
பசியாறி கிடந்தேன் உன் காலடியில்தான்
காதல் ருசிகூட உணர்ந்தேன்
உன் இதழ்களில்தான்..!!!

என்னுயிரே..!!!
என்னோடு நீயிருந்து
உன்னோடு எனை கட்டிவைத்து
அழகுபார்தவளும் நீதான்..!!!

என்னை மனிதனாக மாற்றி
மகிழ்ச்சி தந்தவளும்
நீ மட்டுமேதான்..!!!

இரவோடு நிலவாக
வானோடு நீலமாக
என்னோடு நீயிருந்த நேரமெல்லாம்
இனிக்குதடி..!!

பத்துநாளாய் உனை
பார்க்காது எப்படியிருப்பேன் என்று
உள்ளே பைத்தியமும் பிடிக்குதடி…!!!!


உறவுகளை தேடி நீ போக போகின்றாய்
என் உறவான உன்னை விட்டு நான்
எப்படியடி உயிர் வாழப்போகிறேன்..????

நீயில்லாத பொழுதுகளில்…

தனிமையில் உனை களவாடிட போகிறேன்
நிமிடங்களில் உன் புன்னைகையை
சிறைவைக்கப்போகிறேன்..!!!

இரவுகளில் உன் மடியில் தலையசைக்கபோகிறேன்
கனவுகளில் உன்னோடு கதைபேச போகிறேன்..!!!

தீயின் மேல் அமர்ந்து உன் வருகைக்காய்
தவம் கிடக்கபோகிறேன்..!!!

காலங்கள் மறந்து கவிதையில் உன்னோடு
கட்டியனைத்து கிடக்கப்போகிறேன்..!!!

நீ நானாய் திரும்பி வரும் வரை
நான் நீயாய் உருமாறி உன்
உயிரில் கலந்து உயிர்வாழப்போகிறேன்
என்னுயிரே…!!!!
--பிசாசு-

Thursday, March 2, 2017

கனவிலும் நினையேன்..!!!

கண்கள் விட்டு கண்ணங்கள் தொட்டு
கடந்து போகிறது கண்ணீர் கோடுகள்
சேருமிடம் தெரியாது…!!!

உடல் விட்டு உயிரற்று
காற்றாகிப்போகிறது காதல்
உன் மனம் புரியாது…!!!

எனை விட்டு இதயம் தாழிட்டு
இடம் மாறி போகிறாய் நீ
என் வலி உணராது…!!!

உனை தொட்டு என்னுயிர் எடுத்து
பின்னாலே நிழலாகி வருகிறேன் நான்
உன் காதல் மறவாது..!!!

இரவோடு உறவாகி
கனவோடு தினம் கூடி நானும் நீயும்
நிதம் வாழ்ந்த நினைவுகளை
இரவுகள் மறந்துபோனாலும்
கனவுகளிலும் நினையேன்
‘’உனை மறந்து புது வாழ்வொன்று
நான் கொள்ள…”


--பிசாசு--

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...