Sunday, March 19, 2017

காத்திரு

எதைச் சொல்லி
வேண்டுமானாலும்
எனை விட்டு உனை பிரிக்க
முயற்சிக்கலாம்
உன் வீட்டார்- என் காதலை காட்டி
நான் உனை மீட்பேன்..!!

பணம் நீட்டி
மனம் மாற்றி
மானம் காத்திடு என்று
எனை மறக்க செய்யலாம்- நீ
கண் மூடி எனை நினைத்து
அவர் முன்னே திறந்துபார்
விழி தாண்டி
உடல் சென்று  உன் இதயத்தில்
நான் மட்டும் தானிருப்பேன்..!!!

வருகின்ற வலியெல்லாம்
ஏற்று காத்திருப்போம்
படி தாண்டி போகாமல் 
பார்த்திருப்போம்

வாழ்வில் இணைய முடியாது 
போனாலும்
மரணித்திலாவது நாம் 
சேர்ந்திடுவோம்

யார் வந்து தடுப்பார்
எமை அங்கு பிரிப்பார்
பணம் பதவி ஜாதி என்று
எதை நீட்டி  தடுப்பார்..!!!
-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...