Friday, March 10, 2017

அன்பால் நனைத்துவிடு

அதிகாலை முதல் 
அந்திசாயும் வரை
வாசற்படி நின்று- தெருவோரமாய்
உனை தேடியே பார்வைகள் தவம் கிடக்க…
குளிர்கால காற்றாய் 
பௌரணமி நிலவாய்
நீ வந்துபோக கடவுள் கண்ட சொக்கனாய்
வார்த்தை மறந்து போகின்றேனடி நான் சகி..!!!

தூரமாய் எனை கடந்து நீ போய்
ஓரமாய் நின்று எனை நோக்க
சொக்கியே போனது என் மனதும்..!!!

தாகமாய் இருக்கும் என்னில் 
மேகமாய் பொழிந்து
தாகம் தீர்ப்பதந்த ஒரு நொடி 
ஓரப்பார்வை மட்டும்தான்..!!!

போதுமடி உயிரே..!!!
பார்வைகள் தாண்டி
வெட்கம் உடைத்து சொல்லிவிடு
காதலை..!!!

உன் இடைபிடித்து பின்னே 
குழந்தையாய்  நான் தொடர 
தடைகள் தகர்த்து 
குடைகள் விலக்கி
நனைத்துவிடு அன்பால் என்னை…!!!

-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...