Friday, March 17, 2017

ஆறுதலுக்கு நம் காதல்

காதல் வலி பொருத்தோமடி
நாம் கண்ணீரில் 

தீக்குளித்தோமடி…
எதிர்பார்புகள் 
வில்லாய் விரிந்ததோ..???
எதிர்ப்புகள் அம்பாய் 

எமை துளைத்ததோ..???

சகியே..


கனவுகள் உடைபெறலாம்
காட்சிகள் குருடாகளாம்
இரவுகளும் கூட இரத்தம் சிந்தலாம்
இதயம் மட்டும் 

ஊனமாகுமா..???
நம்மில் வாழும் காதல் மட்டும் 

சாகுமா..???

எனக்காக நீ
உனக்காக நான்
நமக்காக நம் காதலிருக்க
கவலைகள் ஏனடி -என் 
கண்மணியே..!!!
காலங்கள் மாறுமடி
நம் மணவரை கோலம் காணுமடி..!!
எதிர்தவரெல்லாம் எமை ஏற்பாரடி
அவர்களின் வாழ்த்துக்களோடு 
நாம் வாழ்வோமடி…!!!

உயிரே...!!!

எண்ணங்களில்
அலைமோதிக்கொள்ளாதே
எம் எதிர்காலத்தில் 
கரைசேர அவை தேவை..!!!!


கண்ணீரை வீணாக்காதே
அதை சேமித்துக்கொள்
உன் பிரசவ வலிக்குத் தேவை..!!!

கண்ணங்கள் துடைத்து
சிவக்க வைக்காதே
அது என் முத்தத்தின் முடிவில்
உன்  வெட்கத்தில் 
சிவக்க வேண்டும்…!!!!

உடலை 
வருத்திக்கொள்ளாதே
என் அனைப்பில் -நீ 
சாய்ந்திருக்கும் காலம்
வெகு தூரமில்லை…!!!


கனவுகளை 
மறந்துவிடாதே
இரவுகளில் உன் மார்பில்
நான் உறங்க வேண்டும்…!!!

வார்த்தைகளை 
தொலைத்துவிடாதே
உன் தாலாட்டில் நான்
கண்ணுறங்க வேண்டும்...!!!

எது நடந்தாலும்
நமக்கான உறவுகளை 
மறந்துவிடாதே
நம் பிள்ளையை கொஞ்சுவதற்கும்
அவர்கள் உடன் இருக்க வேண்டும்…!!!

சகியே…!!!

விரதங்கள் கொள்ளாதே
நீ ரசித்து ருசிக்க
நம் காதல் தவம் கிடப்பதை
மறவாதே…!!!


எதிர்புகள் ஏறாழம்
எவை என்ன செய்துவிடும்
நானுனக்குள்ளும் நீ எனக்குள்ளும்
வாழும் போது…!!!!
-பிசாசு-




No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...