உன்னை பிரிந்து வாழ
மனமில்லை
மறந்து போகவும்
தைரியமும் இல்லை
பின் எப்படி உன்னை விட்டு
நான் போவேன்..???
முயற்சிக்கவே
முடியாதுபோகத்தான் -உன்
மூச்சோடு நான் கலந்து
இப்படியானேன்..!!!
என் சகியே..???
ஒரு நொடி பிரிந்தாலும்
மறு நொடி இறந்துபோகும்
என்னியத்தை
எதைக்கொண்டு
எப்படி நான் மூடி வைப்பேன்..???
ஆசைகளை அடக்கி
ஆளத்தெரியவில்லை
உன்னை போல்
அன்பை கூட பூட்டிவைக்க
தெரியவில்லை..!!!
தெரிந்ததெல்லாம்
ஒன்றேதான்
அதுவும் நீ மட்டும் தான் சகியே...!!!
-பிசாசு-
😈
😈
😈



No comments:
Post a Comment