Saturday, November 21, 2020

மனிதம் இறந்ததோ

மனிதம் எங்கே போகின்றது

மரணத்திலும்
மங்கை அவளின் 
மனம் மறந்து போனது
மானிடம்

ஆடை விழக்கி
அதில் சுகம் தேடும்
ஆண் வர்கம் 
வெட்கப்பட வேண்டியது 
ஆணாய் பிறந்ததற்கு

வரலாற்றில்
சேலை கொடுத்த கேசவன்
இன்று எங்கே சென்றான்..??
அவனும் செல்பி 
எடுத்துக்கொண்டிருந்தானோ
ராதையின் கூடாரத்தில்..???

சுற்றியிருந்தவர் நூறு
ஒரு துளியளவு கூடவா
துனிவுமில்லாது போனது
துணியும் இல்லாது போனது
இவள் தேகத்தை மறைக்க..???

கலியுகம்தானிது
கமராக்கலில் இருந்து
காம ராஜாக்கள்
பிறந்திருப்பதால்..!!!

பிசாசு😈😈😈😈

https://m.facebook.com/story.php?story_fbid=1307690929314801&id=100002217199095

நிழலாடும் நினைவுகள் ❤️

நிழலாடும் நினைவுகள்
கண் மூடி உனை நான் கனவுகளிலும் 
காதல் செய்வேன்- நிஜமாக நீ என்னுள் 
உயிரோடி கிடக்கின்ற போதும்…!!!

நீயும் நானும் சந்திக்காத போதும்
ஒருவரையொருவர்  
காதலை சிந்தித்தோம்..!!!
தனித்தனியே காதல் கொண்டும்
தனிமையில் எமை நாம் 
வஞ்சித்தோம்..!!!
இன்று நீயும் நானும் நாமாகி 
உயிராய் ஓர் உறவாகி 
காதலில் தித்தித்தோம்..!!!

உன் வெட்கங்கள் உடைத்து
நீ கொட்டித்தீர்தாய் உன் காதலை
நான் என் கவிதைகளை 
கடன் கொண்டு முட்டி மோதினேன்..!!!

நிஜமாகவே 
இன்னமும் ஆச்சரியம் தானடி
ஏன் நீ என்னுள் விழுந்தாய் 
நானெப்படி உன்னுள் 
தொலைந்தேனெற்று..!!! 

தேடித் தேடி தீராத காதலை நீ தந்தாய்
இனி நாம் கூடிக் கூடி காதல் செய்வோமடி..!!!

நிஜங்கள் எல்லாம்
நம்முள் நின்றாட 
தினம் தினம் 
காதலும் கவிதைகளுமாய் 
என்னுள் நிழலாடிக்கிடக்க
மீண்டும் மீண்டும் நானுள்ளே
உயிராடிப் போகின்றேனடி…!!!!

-பிசாசு-

நீதான்..!!!

உன்னை பிரிந்து வாழ 
மனமில்லை
மறந்து போகவும் 
தைரியமும் இல்லை
பின் எப்படி உன்னை விட்டு 
நான் போவேன்..???
முயற்சிக்கவே 
முடியாதுபோகத்தான் -உன் 
மூச்சோடு நான் கலந்து 
இப்படியானேன்..!!!

என் சகியே..???

ஒரு நொடி பிரிந்தாலும் 
மறு நொடி இறந்துபோகும்
என்னியத்தை 
எதைக்கொண்டு 
எப்படி நான் மூடி வைப்பேன்..???

ஆசைகளை அடக்கி 
ஆளத்தெரியவில்லை
உன்னை போல்
அன்பை கூட பூட்டிவைக்க 
தெரியவில்லை..!!!

தெரிந்ததெல்லாம்
ஒன்றேதான் 
அதுவும் நீ மட்டும் தான் சகியே...!!!

-பிசாசு-😈😈😈

அலாதி அன்பின் ஆதி ❤️❤️ காதலும் காமமும்

அலாதி அன்பின்
ஆதி நீ-அள்ளி 
அணைத்துகொள்வேன்
நெஞ்சோடு...!!!


முதல் முத்தமதை 
நெற்றியிலே எப்பொழுதும்
நான் பதிப்பேன் – சம்மதம்
கேளாது..!!!

சங்கடங்கள் 
கொள்ளாதே சகியே
முத்ததின் 
சந்தங்களை ரசிப்போம்...!!!

கண்களினால் பேசிக்கொள்வேன்
மூடித்திறக்கும் இமைகளை
ரசிக்கும் பார்வையில்
நானே இதழ்கொண்டு 
மூடிக்கொள்வேன்...!!!

கரங்களிரண்டை
காதோடு பதித்து- உன்
முகம் சிந்தும் வெட்கத்தின்
புன்னைகையை 
ரசிப்பேன் என் சகியே...!!!

கண்ணங்கள் கிள்ளி
முத்தங்கள் வைத்து
கவிதைகள் சொல்லி
நானமதில் நீயுறைய
சம்மதம் கேட்டு
உதடுகளை சுவைப்பேன்..!!!

காதோடு காதல் சொல்லி
கழுத்தோடு சுவாசித்து
ரோமங்கள் விலக்கி
விரல்களினால் ஓவியம்
தீட்டுவேன் உன் மார்பினில்..!!!

கொடியாய் நீ வளைய
இடையோடு நான் அணைத்து
மார்போடு சாய்த்து
மறுகணம் உச்சு முகர்ந்து
முத்தங்கள் நான் கொடுப்பேன்...!!!


மகிழ்ந்து நீ 
மனதினை விரித்து 
வெட்க்கத்தில் சம்மதமாய் 
உன் முத்தத்தை 
என் நெற்றியில் பதித்திட 
புன்னகை நான் சிந்துவேன்..!!!

இதழினில் இனித்திட 
இயல்புநிலை இடம்மாற 
முத்தங்கள் கொடுத்துவிடு நீ
உன் இதழ்கொண்டு
என்னிதழ் தோய்த்துவிட 
இடையோடு இறுக்கி உனை நான்
அணைப்பேன்..!!!

ஆடைகள் மூடாத பாகமெல்லாம்
விரல்களினால் கடந்து 
இதழ்களினால் ஈரமாக்கி
ஆடைகள் விலக்கி
அங்கங்கள் ரசிப்பேன் 
என் சகியே...!!!

உன் பாதங்களை ஏந்தி 
கொலுசினை தாண்டி
நான் பதிக்கும் முத்தங்களால்
தேகம் முழுவதும் சிலிர்த்திட...!!!

விரல்களோடு விரல்கள் 
பிண்ணிக்கொள்ள
உன் காந்தமேனியில்
என் தேகமுரசி...!!!

பெண்மை வரை இதழ்கொண்டு
நா திறந்து தேனமுதை 
நான் சுவைக்க-தலை கோதி
விரல் மீட்டி நீ எனை இழுத்து 
உன் இதழ் பதிக்க...!!!

சம்மதம் நான் கேட்டு...!!!

தேவதையே உன் தேகமதில்
என் தேகம் கலப்பேன்...!!!




என்னாசைகள் மட்டுமல்ல
உன்னாசைகளுக்கும் இடம் 
கொடுப்பேன்- தடம் பதித்துவிடு
தடைகள் எதிலுமில்லை...!!!

இதயமும் இடம்மாற
தேகமும் இடம்மாற
ஒரு போக இரவுக்குள்
மேக மெத்தையிட்டு 
யாகம் வளர்ப்போம் வா சகியே..!!!

யாகத்தின் முடிவில் 
தியாகம் ஏதும் இல்லை
மார்பினில் சாய்ந்து
விரல்கள் கோர்த்து
காதல் மொழி பேசலாம்

மீண்டும்......

அலாதி அன்பின்
ஆதி நீ-அள்ளி 
அணைத்துகொள்வேன்
நெஞ்சோடு...!!!

-பிசாசு-

Saturday, November 7, 2020

காதல் படுத்தும் பாடு (உயிரெழுத்துக்களில்)


ழகாய் நீ தந்த முத்தம்
அமிர்தமாய் இனிக்க
அளவுக்கதிமாய் பருகிவிட்டு மயக்கத்தை
அனுபவிக்கிறேன்- ஏதுமறியாது
அமைதியாய் சிரிக்கின்றாய்...!!!
................................................................
யுள் முழுதுவதும் நீ என்னோடு..
ஆனந்தத்தில் நான் வானோடு..
ஆசைகளை சேமித்து அன்போடு வாழ்வோம்
ஆடம்பரம் எதற்கடி- நம் காதலே
ஆதாரம் நமக்கடி..!!!
.................................................................
டை வளைத்து இறுகப்பற்றிய கரம் 
இன்னும் வாசம் கூட்டுகிறது
இது நீ தந்த வரமா?
இல்லை வாலிபத்தின் சாபமா?
இன்னும் புரியவில்லையடி….!!!
................................................................
சனின் ஆணையாய்- எனை
ஈன்றவளின் ஆசைகளில் ஒன்றாய்
ஈடிகைக்கொண்டு எழுதிவைக்கின்றேன்
ஈடில்லா உறவு நீயென்று-  வாழவோம் நாம்
ஈருடல் ஓர் உயிரென சகியே..!!!
..............................................................................
னை அள்ளி எடுத்து அணைத்துக்கொள்ள
உயிர் வரை வாசம் வீசுகின்றது காதல்
உனை தள்ளி விட்டு கடந்திடும் போதெல்லாம்
உயிர் வரை வலிகொடுகின்றது பிரிவு- நான் என்பது
உன்னிலே தொடங்கி உன்னிலே முடியட்டும்..!!!
.........................................................................................
ரெல்லாம் தனிமைபட்டு கிடக்கின்றது
ஊரடங்கு உத்தரவில்- காலம் தனை கிழித்து
ஊமையாய் காதல் மௌனித்திருக்க
ஊண் இன்றி உறக்கமின்றி – உளரி தீர்கின்றது
ஊடலில் கவிதை..!!!
.........................................................................................

ன்னோடு மட்டும் எல்லைகள் நீ வகுப்பதில்லை
எதுவென்றாலும் எதில் நீ வென்றாலும் 
எப்படி என்றாலும் உன்னிடம் மட்டும் தோற்பதில்
எனக்கென்றும் பேரானந்தம் தான்- அதனாலே
எப்பொழுதும் நாம் தோற்பதேயில்லை சகியே..!!!
.........................................................................................
னென்று புரியாத ஒரு உணர்வே காதலாய் 
ஏக்கங்கள் கொடுத்து தூக்கம் தனை கெடுத்து
ஏதுமறியா மழலையாய் மாற்றி- புன்னகையோடு
ஏந்திட செய்யும் வலிகளையும் – கண்ணீரையும்
ஏற்றுக்கொள்ளும் வலிமையே காதல்..!!!
.........................................................................................
ங்கணையெடுத்து உனை உடுத்துவேன்
ஐயம் தவிர்த்துக்கொள் நான் உனக்கானவன்
ஐந்தெழுத்தில் கவிதைகொண்டு 
ஐம்பொறி தீண்டி முத்தமிடுவேன்- சகியே
ஐம்புலத்தார் முன் உன் கழுத்தில் மலையிடுவேன்..!!!

.........................................................................................

ன்றான இரண்டு இதயங்களில்
ஒலித்துக்கொண்டிருக்கும் காதலிசை
ஒன்றுதான்- மீசை நரைத்து உடல் தளரத்து
ஒருநாள் வாழ்க்கை முடியும் என்றானபோதும்
ஒன்றாகவே நிசப்தமாகும் காதல்..!!!
.........................................................................................
வியங்களாய் தீட்டுகின்றேன் நினைவுகளை
ஓரங்க நாடகம்தனை நடத்திவிட்டு
ஓர் ராச்சியத்தில் கிரீடத்தில் வைக்கப்படும் காதலை
ஓராட்டு பாடி நீ தூங்க வைப்பா(தாய்) –நான்
ஓய்வெடுக்கின்றேன் கவிதைகளோடு...!!!
.........................................................................................
ஒளவியம் கொள்கின்றேன் மழலையை நீ கொஞ்ச
ஔடதம் தந்துவிடு என் பிணிதனை நீக்க
ஔசித்தியம் எதுவென்று சிந்திக்காதே- அன்பாய்
ஔ எனை அணைத்துக்கொள்ளடி ஆதி அந்தம்
மறந்து துயில் கொள்வோம்...





-பிசாசு-

Saturday, September 12, 2020

நான






வெறுமையே உனை 
காதல் செய்கிறேன் 
தனிமையில் 
தியானம் கொள்கிறேன்

பாதியாய் ஜீவன் 
கரைந்து போகிறேன்
பாவியாய் எனை நான் 
உணர்ந்து கொள்கிறேன்…!!

மேகமாய் நான் 
கலைந்து போகிறேன்
மேனியை தீயில் 
கரைக்கப் போகிறேன்

நா வறண்டு 
சாகபோகிறேன்
எனை நானே வரைந்து 
கசக்கி எறிகிறேன்….!!

நான் யாரென்று 
மறந்து போகிறேன்
மறு வாழ்வொன்று இனி வேண்டாம்
முற்றுப்புள்ளியில் எனை நானே 
முடித்துக்கொள்கிறேன்..!!!

இனி
மெளனமாய் கடந்து போகிறேன்
மரணம் மறந்து உறவை துறந்து
தனிமையாய் நகரபோகிறேன்…!!

-பிசாசு-



அந்த இரவு




பருவத்தின் தீதனை
தனித்திட நான் -ஒரு மாய
உலகத்திற்குள் நுழைகின்றேன்..!!
 
மதுவின் சுவைகண்ட – என் நாவிற்கு
மாதுவின் சுவை காண ஆசையூறியது
 
போதை தலைக்கேறியும்
பாதை மாறாது
சுகம் தேடி
வழிப்போனதென்னவோ
ஆச்சரியம் தான்..!!
 
அழகழகாய்
வகை வகையாய்
மூவாறு முதல் நாற்பதை
கடந்தது வரை-அரைநிர்வாண 
புகைப்படத்தில் காட்டப்படுகிறது…!!
 
தேர்ந்தெடுப்பதில் என்றுமே நான்
தோல்வி கண்டவன்
இதில் மட்டும் எப்படி???

ஆரஞ்சில் ஒன்று போதும்
என்றெந்தன் மனம் புகைப்படங்கள் 
பார்க்காது புத்தி சொன்னது….!!
 
வாடகை அறையில் அமர்ந்திட
வழி சொல்லிக் கொடுத்தனர்…!!
 
முழுவதுமாய் நான் -மூன்று
சிகரட்டுகளை முடிக்கின்ற வேளையில்
பிின்னால் ஒரு உருவம்- பெண்தான்
அவளென்று நிழல் சொன்னது….!!
 
தாழிட்டு அவள் திரும்பி
நடைபயின்று என் அருகில்
அமர்வதை நான் உணர்ந்தேன்..!!
போதை கொஞ்சம் தெளிந்தேன்..!!
 
அவளின் மல்லிகை கலந்த 
வாசனை திரவியத்தால் 
புகைத்தலின் நாற்றத்தையும்
மிஞ்சிட முடிந்தது…!!
 
முகம் பார்க்க மனம் விரும்பவில்லை
வாய் பேச வார்த்தைகள் வரவில்லை
கட்டியனைக்க கரங்கள் நீளவில்லை
 
விட்டு விட்டு ஒளிர்ந்த மின் விளக்கின்
வெளிச்சத்தில்- இதயம் விடாமல் துடித்தது 
ஏனோ ஒரு பயத்தினால்..!!

அமைதியாய் இருந்தால் என்ன அர்த்தம்
ஏதாவது பேசலாமே
 
என்றவள் குரல்  கேட்க
மீதி போதையுபம் தெளிந்து
சித்தம் கலைந்து
திரும்பி நான் பார்த்தேன்..!!
 
விழிகள் விரிந்து
கண்ணீர் வழிந்து
உதடுகள் காய்ந்து
கரங்கள் நடுங்கி
வார்த்தைகள் மறந்து
எழுந்து நான் ஒரமாய் ஓடிப்போனேன்..!!
 
அலங்காரப் பெண்ணாய் அங்கிருந்தவள்...!!
                       
ஐயோ..!!
உறவைக் கூட சொல்ல முடியவில்லை 
ஔியிலவள் தெரிந்த பின்பு..!!
 
மரணம் வந்து கொல்லும் கதை..!!
மறந்திட நினைத்தேன் அந்த இரவை..!!!
மறுக்க முடியாது அவள் உறவை…!!
-பிசாசு-



 
 

Wednesday, June 24, 2020

நான் வரைந்த ஓவியம்


வண்ணங்கள் கொண்டென்னை
நானே வரைந்துப் பார்த்தேன்
சுவரெல்லாம் அழுக்குகள்..!!

தூரமாய் சென்றெந்தன்
பார்வைகளை நோக்கினேன்
கண்கள் எல்லாம் பல குரோதங்கள்...!!

ஓரமாய் நின்றெந்தன்
உதடுகளை வருடினேன்- என்
விரல்கள் எல்லாம் 
பொய்மையின் தழும்புகள்...!!

மௌனமாய் நகர்ந்தெந்தன்
மார்பினில் சாய்ந்தேன்
செவியெல்லாம் 
துரோகங்களின் கூக்குரல்கள்..!!

வேகமாய் விலகியெந்தன்
தேகத்தின் அருகில் நின்றேன்
சுவாசமெல்லாம் 
பாவங்களின் வாடைகாற்று..!!

பாவமாய் குணிந்தெந்தன்
இடையினை தழுவினேன்
கரங்கள் இரண்டிலும் 
இச்சைகளில் பிசுபிசுப்புகள்..!!

சோகமாய் அமர்ந்தெந்தன்
பாதங்களை தாங்கினேன்
உள்ளங்கைகளிலே 
இழப்புகளின் சுவடுகள்..!!

வெறுப்போடு எழுந்து நான்
காரி உமிழ்ந்தேன் 
சித்திரத்தின் மீது-ஆனால் 
ஈரமாகிப்போனதென்னவோ
என் முகம்தான்..!!

ஆமாம் இதுவரை
அழுக்குகளின் மீதே நான்
அழகு பூசி திரிந்திருக்கின்றேன்..!!

சித்திரத்தை அழித்துவிட்டு
அமைதியாய் கடந்து போகிறேன்
சுவருக்கு நன்றி சொல்லி..!!

முடிந்தால்
நீங்களே உங்களை
வரைந்துபாருங்கள்
நீங்கள் அழகா???
அழுக்கா??? என்று தெரியும்..!!

-பிசாசு-











Wednesday, June 10, 2020

அன்பினால்..


முனைகளின் கூர்மையினால்
குத்துகின்ற வலிகளையெல்லாம்
வார்த்தைகளாக்கி
நிறமூட்டி நிஜம் காட்டும் தாள்களும்
காதலித்துக்கொண்டுதான் இருக்கின்றது
எழுத்தாணிகளை .!!!

எண்ணங்கள்
எவையானபின்பும்
அழுத்தங்கள் வலிக்கின்றபோதும்
மௌனமாயிருந்து
குருதியில் உறைந்து -தானும்
காதலித்துக்கொண்டுதான் இருக்கின்றது
தாள்களை எழுத்தாணிகள்..!!!

பெண்மையாய் பேனைகள்
மென்மைகொள்ளாத போதெல்லாம்
அழுத்தும் கூர்மையின் வலியையும்
கூட வாங்கிகொள்கின்றது
நகழ்களாக..!!!

பிழையென ஆனபின்பும்
கசக்கியெறியும் போதெல்லாம்
குப்பைத்தொட்டிக்குள்
கட்டிப்புரண்டு
சல்லாபம் தீர்க்கின்றது
எழுத்துப்பிழைகளோடு
தாள்கள்..!!!

சரியென ஆகி
மூடிவைக்கின்ற போதெல்லாம்
மடிசாய்ந்து
உடலுரசி உள்ளம் குளிர்ந்து
தாம்பத்தியம்கொள்கின்றது
தாள்களோடு
எழுத்துக்கள்..!!!


எத்தனை பிழைகள்
எண்ணிலடங்கா குறைகள்
அத்தனையும் வருகின்ற போதெல்லாம்
அந்நியோன்னியத்தின்
அழங்கரிப்புக்களாலே
தாழ்களும் எழுத்தாணிகளும்
முழுநிறைவாய் எழுத்துக்களை
பிரசவிக்கின்றன..!!!

ஆம்
எழுதிய புத்தகங்களும்
கிழித்து கசக்கி எறியும்
பக்கங்களும்
குடித்தனம் நடத்திக்கொண்டுதான்
இருக்கின்றன
மௌனமாய்..!!!

-பிசாசு-



திருமணமெனும் ஒரு தருணம்


இரு வேறு மனம்
இரு வேறு குணம் 
வெவ்வேறு கனவும் 
ஒன்றாய் இணைந்திடும் தருணமது..!!!

காதலித்த காலங்கள்
கடந்து ஓர் கரைதொட்டு
புது வாழ்வொன்றில்
காலடி பதிக்கும்
நாளது..!!!

உறவுகள் பல கூடி ஒருபுறம்
சொந்தங்கள் சில சேர்ந்து மறுபுறம்
நட்பூக்களின் நகையாடல் ஒரு புறம்
மழலைகளின் சந்தங்கள் மறுபுறமென
நாற்புறமும் மகிழ்ச்சியில்
திளைக்கும்
நிகழ்வது..!!!

யாருக்கு யரென தெரியாத
ரகசியங்கள் உடைப்பட்டு
நீதான் நானென்று
நான் தான் நீயென்று
கடவுள்போட்டதொரு முடிச்சென்று
கையெழுத்திடும்
வைபவமது..!!!

மருதாணி கோலமிட்டு
உடல் மறைத்து பளிங்காய்
ஆடைகளுடுத்தி
மணவறையில் மனமிரண்டும்
உடலொன்றாய் உறசிக்கொள்ளும்
தருணமது..!!!

மாலைகள் ஒவ்வொன்றாய்
இடம் மாறி
தாலியாய் ஒரு அடையாளம்
அவளுக்காய்...
மெட்டியாய் இன்னொரு அடையாளம்
இவனுக்காய்...
ஆனந்த கண்ணீரில்
அபிஷேகம் செய்திடும்
நேரமது...!!!


அழகுக்கழகு சேர்த்து
பேரழகாய் உருமாற்றி
நகைகள் பல சேர்த்து
புன்னகையால் தேரழகாக்கி
புகைபடமெனும்
சேமிப்பில் பதியும்
நினைவது..!!!


ரசித்து ருசித்து
பல விருந்துகள் செய்து
நவரசம் சேர்த்து
வந்தவரெல்லம் வயிறாரி
மனமுவந்து
மணம் நிறைந்து
வாழ்த்துக்கள் சொல்லும்
நாளது..!!!

களைப்பினில் விழுந்து
ஆடைகள் கசங்கி...
கலவி முடிந்து வரும் 
பெருமூச்சாய்
ஒரு மூச்சிவிட்டு..
முகம் பார்த்து...
சாதித்த சந்தோஷத்தில்
வாழ்வின் உச்சம் தொடும்
தருணமது..!!!

இப்படியான
நாளொன்றினை கடந்திடாத
மனங்களும் பல உண்டு..!!!

திருமணம் என்பதே
இருமணம்சேரும்
ஒருநாளென்பதை மறந்து
வாழ்வினை தொலைத்த
மனிதர்களும் கூட
பல உண்டு..!!!


ஜாதி மதமென்று
வசதி வாய்பென்று
பல கதைகள் கூறி
மனங்களை பிரித்து
ரணங்கள் சேர்த்து மரணத்தின் பின்
புத்திதெளிந்த உள்ளங்களும்
இங்குண்டு..!!!

திருமணம் என்பது
ஆடம்பரத்தில் இல்லை
என்று உணரும் மனங்களும்
வாழ்ந்துகொண்டுதானிருக்கின்றன
தனிமையில் உறவுகள் எல்லாம்
உதறிதள்ளிய போதும்..!!!

எது எப்படியான போதும்
திருமணம் என்பது எல்லோருக்கும்
வாய்பதில்லை..!!!
-பிசாசு-

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...