Thursday, December 8, 2016

நீ எனை மாற்றினாய் நீயாக..!!

மலர் மாலை
பூ மழை
வெண்பனிக் கூட்டம்
சேர்ந்து நடந்து வந்ததாய்
உன் தோற்றம்..!!!

கடலலை
கரை நுரை
கிழிஞ்சல்களின் கூட்டம்
கூடி நின்றதாய்
உன் ஏற்ற இறக்கம்..!!!

நீண்ட வானம்
முழு நிலவு
நட்ச்சதிரங்களின் கூட்டம்
ஒட்டிக்கொண்டதாய்
உன் வதனம்..!!!


மலை முகடு
மாலை நேர சூரியன்
மறைந்து கொள்ளும் காட்சியாய்
உன் மாரழகு..!!


மழலை புன்னகை
மந்திர வார்த்தைகள்
கூட்டு ஒப்பந்தம் செய்யததாய்
உன் பேச்சு..!!!


நடைபழகும் குழந்தையாய் -நான்
இடையழகு கொண்ட குமரியாய் -நீ
இடை பிடித்து 

இடம் எடுத்து 
தடம் பதிப்பதாய் -காதல்..!!!
-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...