Saturday, December 17, 2016

நாளை உன் முன்னே..!!!

உயிர் மெய் 
எழுத்துகளை  எடுத்து
உயிரான நீயே என் மெய்யென்று
கிறுக்கி வைக்கின்றேன்
உறவே 
உன் நினைவில் சில
கவிதைகள் தினம் தினம்..!!!

சித்தமதில் 
நீ நுழைய நித்தம் நான்
கனவுக்குள் விழுந்தேன்..!!

பத்திரமாய் உனை நான் பத்தியபடுத்த
மொத்தமாய் நான் 
எழுந்தேன் உன்னவனாக..!!!


கவிஞர்கள் கலைஞர்கள்
எல்லாம் எழுதி வைத்த 
கதைகளில் காணதொரு
இன்பம் கண்டேனடி
புன்னகைத்து சிக்கி திக்கி வரும்- உன்
வார்த்தைகளில்

ஓ… இதுதான் காதல் கிறுக்கா..???


அழகிகள் ஓராயிரம் சொல்ல கேட்டிருக்கின்றேன்
தேவலோக ரதிகளை பற்றியும்
கொஞ்சம் வாசித்திருக்கின்றேன்
தேவதைகளும் பூமிக்கு வந்து போகும்
மாய கதைகளையும் அறிந்திருக்கின்றேன்
எல்லாமே பொய்யாய் போக -நீ
வந்தாயடி தேரழகே 
என் முன்னே மெய்யாய்..!!!



நிலவின் முகம்
கார்மேகம்
வண்ணத்து பூச்சிகளின் ஊர்வலம்
வண்ணசோலையின் வாசனை
இவையெல்லாம் ஒன்றாய் கண்ட இன்பம் 
நீ..!!!

சொல்லடுக்கி சொல்லப்போனால்
சொல்லிக்கொண்டே இருப்பேன்
தொல்லை தரும் வரிகளும் கூட
செல்லமாய் உனை கொஞ்ச சொல்வேன்..!!!



சேமித்த உண்டியல் காசாய்
நினைவுகள் காதலில் நிரம்பியிருக்க -நான்
காதருகே கொண்டுவந்து குலுக்க
கவிதைகளும் உனை காதல் செய்வதாய்
சொல்ல கேட்கின்றேன்..!!
நாளை உன் முன்னே காதலை
உடைக்க போகின்றேன்
சில்லரையாய் சிதறலாம்
உன் இதயவறையை 
நான் வெல்லலாம்

ஆகையால் இன்று இங்கு
முற்று வைக்கிறேன்….!!!
-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...