Monday, December 19, 2016

காதல் நீ..!!

உன் அன்பெனக்கு 
எவ்வளவு முக்கியமானது
உணர்ந்தேன் உன் சிறு பிரிவில்....!!

உடல் பிளந்து உயிர் அளந்து
இதயத்தில் நுழைந்தவளே
உனை தாண்டி -என் 
சிந்தனை போகவில்லை..!!!


யார் யாரோ எனக்கென்று
கைகோர்த்து நடக்க 
வலையில் நழுவிய மீனாய்
பாய்ந்தோடி போக 
திசை மாறி நின்றேன்- நீ வந்து 
என் திசை காட்டினாய்
எனையும் மாற்றினாய்..!!!


காதலிக்கின்றோம்
கனவுகளில் தொலைந்து 
போகின்றோம்
மீண்டும் நாம் மடிமாறி 
பிறக்கின்றோம்

சேர்வதாயினும் நாமகவே
பிரிவதாயினும் 
உயிராகவேயென்று
உள்ளத்தில் உயிலெழுதி 
வைக்கின்றோம்..!!!


இணைந்திருக்கும் தருணங்களில்
நீ எனக்கு வெளியே
இருக்கிறாய்...!!
சிறு ஊடலில்
எனக்குள்ளேயே இருந்து
உன் நினைவு தாளத்திற்கு
என்னை ஆட வைக்கிறாய்


நீ அடிக்கடி
மேகத்துள் நிலவாய் 
ஒளிந்துகொண்டு
உனை தேடவும் வைக்கின்றாய்…!!!!
காதலில் ஏனடி இப்படி எனை போட்டு
வதைக்கின்றாய்..????
-பிசாசு-



No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...