Thursday, December 15, 2016

காதலில்.....!!!!!

அன்றுனை தாமியில் பார்த்தேன்
அடுத்த நொடி எனை மறந்தேன்..!!
இனி என்றுனை பார்ப்பேன் என்றே
ஏங்கியே நான் கிடந்தேன்..!!!

உன் விழி அம்பு என் வழி வந்து தாக்கி
வீழ்ந்து கிடக்கும் என் இதயம்
துடிப்பதை மறுக்குமா.???
உனை நினைப்பதைதான் நிறுத்துமா..???

வானத்து நிலவாய் நீ சிரித்தும்
சோறுண்ணும் சிறு பிள்ளையாய் 
நானிங்கிருந்தும்
குறுகிட முடியா இடைவெளியிது
சேர்ந்திட முடியா தூரமது… புரிந்தும்..
தீயை தொடும் மழலையாய்- உனை
நான் தீண்டினேன்..!!!



இடைவெளி பனியென உருக
மனமது இருப்பிடம் மாற
இணைந்தது புது காதல்..!!!

நிமிடங்கள் ஒவ்வொன்றும் 
கற்பனையில் குளிக்க
தெப்பமாய் நனைந்து நாட்கள்..!!!

சந்திக்கவே தூண்டி எனை தினம் நிந்தித்தது
உனை தீண்டி என்னுடல் தாண்டும் காற்றும்..!!


பனி மலையும் மீன் பாடும் தேனாடும்
ஒன்றோடொன்று கலக்க
புது உலகொன்று பிறந்தது- காதல் இதுதான்
என்றது..!!!


உடல்தாண்டி உளம் சேர்ந்த காதல்
உயிரோடி மோட்சம் காணுமோ..???
யாரறிவார்..??

சுற்றி நின்று தீ மூட்டும்
உயர்வு தாழ்வுகளுக்கு நடுவில்
உருகி உருகி காதலிக்கும் நம் இதயங்கள்
இணையுமா இல்லை பிரியுமா
தெரியாது தவித்திருக்கு இன்னும்
அதிகமாய் காதலிக்கிறது காதல் நம்மை..!!!

நிலவாய் இருக்கும் நீ
வசிக்க வருவாயா என்னில்??
சிறு பிள்ளையாய் நான் வசிக்கவாரவா 
நிலவில்..???
முடிவில்லா தூரமாயுமில்லை
இது பிரிந்திடும் நூலாயுமில்லை
காதல் இனி என்றும் அழிவதாயுமில்லை..!!!
-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...