தேவையில்லை பெண்ணே
உன் மௌனப் பார்வை போதும்
தண்டிக்கப்பட..!!!
உயிர் மூச்சிவிட
வேண்டியதில்லை பெண்ணே
உன் சிறு விலகல் போதும்
இதயம் துடிப்பதை நிறுத்த..!!!
ஓர் ஜென்மம்
போதவில்லை பெண்ணே
உன் சம்மதம் தந்தபின்பு
வாழ்க்கையை வாழ்ந்துவிட...!!!
*********************************************************************************
வலியெது என்று தெரியவில்லை
வலிக்கிறது மனது..!!!
உயிரது என்னிடமில்லை
உடலது எறிகிறது..!!!
உறவென்று இங்கு ஒன்றுமில்லை
உணர்வது அழுகிறது..!!!
காதலும் கடந்து போகிறது
எதுவும் எனதாக இல்லையென்று...!!!
*********************************************************************************
மடிசாய்ந்து கிடக்க
இதயம் வருடியவள் நீ
மொழி மறந்து தவிக்க
வார்த்தைகள் கோர்த்தவள் நீ
தோற்றுபோய் கிடக்க
தேற்றியவள் நீ
இறந்துவிட நினைக்க
வாழ வைத்தவள் நீ
காலம் மறந்து கடக்க
காதல் காட்டியவள் நீ
வலிகள் மறைந்து போக
முத்தமிட்டவள் நீ
*********************************************************************************
No comments:
Post a Comment