Monday, January 23, 2017

தனிமை தாகம்


நிமிடங்கள் எல்லாம் நிலைகுலைந்து
யாரோ நீ யாரோ நான் என்று
முகம் திருப்பி முதுகுபுறம் 

காட்டிக்கொண்டு
அமர்ந்துகிடக்கின்றது..!!


சேர்ந்திருந்தே வாழ்ந்தோமென்று
நாளிகைகள் எல்லாம் நகராது
நமக்காய் காத்திருந்த 
காலங்கலெல்லாம்
கதைக்கதையாய் சொல்லி
கண்ணீர்விட்டு கதறியழுகின்து..!!!


விரல்கோர்த்து நீ கூட்டிவர
பாதைகள் நீள்வதைகூட
மறந்த மனமும் காதலும் உன்
அனைப்பில் ஒடுங்கிடந்தது 


எட்ட நீ தள்ளிபோனாலும்
கரம் பிடித்திழுத்து நெற்றில் வைத்த 
முத்ததின் ஈரமும் கூட இன்னமும் 
காயாதிருக்க -நாம் ஏன் 
கலைந்தோம்
காதல் தீவிலிருந்து…!!!

இனிமையாய் 
இருந்தவையெல்லாம்
கசப்பாகி இதயத்தை கசக்கி
வெளியே வீசியெறிகின்றதடி
இந்த தனிமை எனை கொன்று உன்
நினைவுகளுக்கு அரிதாரம்
பூசிக்கொள்கின்றதடி…!!!

-பிசாசு-



No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...