Monday, January 23, 2017

அவளின் கண்ணக்குழியில் என் கல்லறை

விட்டுவிட்டு துடிக்கும்
இமையிரண்டுக்கும் இடையில்
சிக்கிகொண்டு தவிப்பதது 
விழிகளல்லடி
அது என்னுயிர்..!!!

உன் புன்னகையில் எப்போதும்
அழகாய் தெரிவதுண்டு
வெட்கத்தில் நீ ஒதுங்க
ஒன்றைக் கண்காட்டி ஓரமாய்
ரசிப்பதுமுண்டு..!!!

பக்கத்தில் நீயிருக்க பக்குவமாய்
பார்த்துக்கொள்ளும்
பாதி தூரம் நீ சென்று மறைய
தேடித் தேடியே உயிர் கசியுமடி
கண்ணீராய்..!!!

உன்விழிகளின் புன்னகை
ஆணுக்குள்ளும் வெட்கம் தந்தது
காதலுக்கும் முதல் தடம் பதித்தது..!!


உதட்டின் புன்னகையில் 
என்னுயிர் அறுத்து
நீ கண்ணக்குழியின் இடுக்குகளில்
ஓர் அழகான கல்லறைசெய்து 
வைத்ததாயென்று
அறியாது போனது என் காதல்..!!!

உனை அனைத்துக்கொண்டு
உறங்கிய நான் என் காதலில்..!!
உன் நினைவுகளை 
இழுத்துப் பிடித்தபடி
சரிந்துக்கிடக்கின்றேன் -நான்
கல்லறையில் உன் கண்ணக்குழியில்…!!!!

-பிசாசு-







No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...