Thursday, January 5, 2017

துளிர் விடும் நினைவுகள்

பசுமையாய் இருந்த 
நினைவுகள் எல்லாம் 
ஏனடி இன்று சுமையாகிப் போனது..!!!
கண்விழித்த போது காட்சிகளாய் 
இருந்த நீயே
கண் அயர்ந்த போது 
கனவுகளில்  வந்து விழுந்தாய்..!!

உன் நினைவுகளே முப்பொழுதும் 
எனை சுற்றிவர 
ஒரு பொழுதும் மறக்கவில்லையடி
நான் உனை..!!!

மடியில் தவழ வைத்து 
மார்போடு எனை அணைத்து 
காதல் தாலாட்டு பாடி சீராட்டி 
கவிதைகளை எழுத வைத்தவள் நீ தானடி..!!

எழுதிய கவிதைகள் 
முடிவுகளைக் காணாது 
முடமாகிக் கிடக்கின்றது என்னோடு சேர்ந்து 
மடிசாய நீ இல்லாது..!!! 

பட்டுப் போய் கெட்டுப்போய் கிடந்த 
கவிதைகள் எல்லாம் 
திரும்பி நீ... நின்று ஒரு பார்வை வீச 
சட்டென்று துளிர்கிறதடி 
கவிதைகள் எல்லாம் 
நம் காதலின் நினைவுகளாய்...!!! 
-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...