Wednesday, May 24, 2017

காதல் நினைவு

உன் வெட்கங்களை
ரசிக்கவேண்டும் என்பதற்காகவே
அடிக்கடி
முத்தக்கோரிக்கை
முன்வைக்கிறேன் நான்..!!!


நிராகரிப்பு செய்யாத
நல்லதொரு அரசாங்கம்தான் நீ..!!!

பிசாசு😈😈😈😈😈😈


.............................................................................................

மரணிப்பதை பற்றி
ஒருபோதும் நான்
கவலைகொண்டதில்லை
அதற்குள் வாழ்ந்துவிட
வேண்டும்- உன் மடியில்..!!!


பிசாசு😈😈😈


........................................................................................


எனக்குள் இருக்கும்
என்னை எடுத்து
உன்னை எனக்குள்
தினம் சேமிக்கின்றேன்


சகியே..
இடம் போதவில்லையடி
கொஞ்சம் உயிர்வரை
வந்துபோவாயா..??


 
பிசாசு😈😈😈😈
.................................................................................

காதல் கொடுக்கப்படும்போது
அதிக சந்தோஷத்தையும்
அதே போல அவனி(ளி)டமிருந்து
கிடைக்கும் போது
மோட்சத்தையும் பெறுகிறது


#பிசாசு😈😈

😈
😈
😈

Saturday, May 20, 2017

புத்தம் மறந்த பித்தர்கள்

முள்ளிவாய்கால்
முற்றுபெறாதொரு ரகசியம்
தர்மதாயும் கற்பழிக்கப்பட்டு
அதர்ம நாய்களின்
அராஜகம்
அரங்கேறிய நாள்…!!!


முடவனே

யுத்தம் நீ கொள்ளவில்லை
பித்தம்கொண்டாடினாய்
புத்தன் வழி நடக்கவுமில்லை
பௌத்தனாய் நீ இருக்கவுமில்லை..!!!

மூடனே

துப்பாக்கி ரவைகளும்
செல்லடிகளும் கொண்டு -எம் வீரபெண்களை
வெல்ல முடியவில்லையென்று
காமவேட்டையில் தான்
வென்றிட முயன்றாய்..???

அரக்கனே

கருணை சொல்லி தந்தவளா
உங்கள் தாய்
இல்லை இல்லை..!!!
கட்டுப்பாடுகள் பற்றி கதை
கூறியவரா
உங்கள் தந்தை..???
இருக்கவே இருக்காது..!!!

புத்தன் சொன்ன கதைகளை
கேட்டவரா
நீங்கள் ஒருபோதுமில்லை..!!!
கால நேரம் கை கூடிவந்தாலும்
தாய் தங்கையோடும்
புணரும் இனம்தான் நீங்கள்…!!!


பித்தனே

கைகளை கட்டிப்போட்டு
கண்களை மூடிவிட்டு
ஆடையின்றி அம்மணமாயாக்கி
ஆன்மாவை பிரித்தது உங்கள்
கோழைத்தனம்…!!!

மார்பங்களை அறுத்து
யோனிகளை கிழித்த
உங்கள் நா
நிச்சயம் தாய்பால் குடித்து
வளர்ந்திருக்காது
சுக்கிலம் நீர்
குடித்ததாகியிருக்க வேண்டும்..!!!

சிறுபிள்ளை முதல்
வயதாகிபோன
பெண்கள் வரை
கற்பழிக்கப்பட்டு
கொலை செய்யப்பட்டு
பிணத்தோடும்
காமவெறி தீர்த்த
உங்கள் ஆண் குறிகள்
அழிந்துபோகட்டும்..!!!

பால் மனம் மாறா
பச்சிளம் என்று வாதம் செய்தது
தீவிரவாதம் செய்தது..??
நீங்கள் எல்லாம் அழிக்க நினைத்தது
ஆயுதம் தாங்கிய புலிகளையல்ல
ஆயிரமாண்டுகால
தமிழை..!!!


முள்வேலிக்குள் அன்று
மூடிவைத்துவிட
நீங்கள் நினைத்தது
முப்பதுவருட கனவை
தமிழ் உணர்வை
எங்கள் அடையாள சின்னத்தை..!!!

மேக்க புதுன்கே தேசயாய்”
என்று நீங்கள் கூவிக்கொண்டு
திரிவது நியாயம் என்றால்
தனிநாடு தமிழீழநாடு
என்று நாங்கள் உயிர்விட்டது
எந்தவகையில்
அநியாயம்..???

கலிகாலம் கொண்டு நீங்கள்
காவியுடை பூண்டு
இனவாதம் பேசிதிரியும்
போதகர்களே…

கடவுள் இருக்கின்றாரா
இது விடைதெரியா
கேள்வி அது போல்
காலம் மாறும்
கரிகாலன் காலம் வரும்


கணக்கை கச்சிதமாய் முடிக்க
ஒரு காலம் பிறக்கும்.
காத்திருப்போம்
கண்ணீருடன்.!!!

-பிசாசு-😈😈😈

Thursday, May 18, 2017

விடுபடா நினைவு..!!!

விபரீதம் தெரியாது 
காதல் தரையில் விழுந்து 
சுக்கு நூறாய் 
உடைந்தே போனது 
இதயம்..!!!

 

செடிகளை வெட்டி 
அழகுபார்க்கும் பாவை நீ 
பூக்களை கொய்து 
ஆசை தீர்க்கும் பேதையும் நீ 
உறவை எரித்து திருநீறு பூசும் 
அகோராதிபதியும் நீ 
காதலை ஒடித்து வைத்து 
புன்னகைக்கும் பைத்தியகாரியும் நீ 
என்றறியாது 
ஓர் காதல் கொண்டேன் …!!!

 

தீயறிந்தும் தீண்டும் 
விட்டில் பூச்சாய் 
உனை தேடிவர சுட்டெரிக்கின்றாயடி 
எனையும் 
எட்டிவைத்து பார்கின்றாயடி…!!!

வலிகளோடு 

வாழ்ந்திடவும் முடிந்ததடி 
என் காதல் ஒத்தடமிட்டு 
எனக்காக தாலாட்டுபாடி 
ஆறுதலாய் அணைத்து 
சொல்கின்றது -உன் 
அடிமை சங்கிலியில் 
விடுபடா உன் நினைவை 
மட்டும்கொண்டு 
எனை ஆட்சிசெய்கிறது…!!! 

-பிசாசு-

உயிர் வரை நீ

உறவாடிட 
உறவுகள் இல்லை
உரிமைகொண்டிட 

மனமில்லை
உனக்காக நானிங்கு 

உயிர்கொண்டேன்
என்று நீ வந்து சொல்ல
நொந்துபோன மனமொன்று
தளிர்விட்ட மரமானது 

உன்னால்….!!!

உடல் வரை மட்டும் 

காதல் வந்து போனது
பணம் மட்டும் வாழ்க்கையென்று
சொல்லி கருகிப்போனது
உயர் வழியில்லையென்று
தாழ்ந்துபோனது…
சதைகொண்ட 

பிண்டமாக
அழிகிப்போனது…!!!

கிழக்கில் சூரியனாய் 

நீ வந்தபோது
மனமிங்கு உருகொண்டது
மாறாத காதலொன்று 

நீ தந்தபோது
மனமிங்கு உனை கொண்டாடிட
உயிர் வரை அன்பே நீயே
உறவாகி கிடக்கின்றாய்…!!!

-பிசாசு

Wednesday, May 3, 2017

காதலை மரணம் வென்றது

பிறந்த நாள் முதல்
நான் வாழ்ந்த நாட்கள் 
உனக்காகத்தான்..

இணைசேர முடியா துருவங்களாய்
உயிர் சேர வழியில்லா உடல்களாய்
நீயும் நானும் தவித்து 
துடித்துக்கிடந்தோம்..!!!


ஏழ்மையில் பிறந்து
எளிமையில் வாழ்ந்தாலும்
என் காதல் மட்டும்
வெறுமையில் இருக்கவில்லை..!!!


உனை நினைத்தே
துடித்த என் இதயம்
துளைகளாய் துண்டாடி
தூள் தூளாய் உடைந்து 
போனதேனோ அன்பே..!!!!


ஜாதி மதங்கள் எம்மை 
பிரித்து வைத்து சிரித்தது...
காதல் மனம் நம்மை 
இணைத்து வைத்து ரசித்தது....
பேதை உன் எண்ணம் 
என்னுள் இரண்டர கலந்தது
பாதை மாறி போகா நம் காதலால் மட்டும் 
எப்படி முடிந்தது..???


சேர்ந்திடத்தான் காதலித்தோம்
வாழ்ந்திடத்தான் 
கட்டியணைத்தோம்
உனக்குள் நானும் எனக்குள் நீயும்
ஒழிந்துக்கொள்ளத்தான் ஓடி திரிந்தோம்

விதி செய்த சதியா அன்பே
பிரியாத நம் காதல்
பிரித்திட முடியாத நம் உறவு
மண்ணுக்குள் மண்ணாய் போனது
காதலை மரணம் வந்து  எப்படி 
வென்றது..,?????

-பிசாசு-

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...