உறவுகள் இல்லை
உரிமைகொண்டிட
மனமில்லை
உனக்காக நானிங்கு

என்று நீ வந்து சொல்ல
நொந்துபோன மனமொன்று
தளிர்விட்ட மரமானது
உன்னால்….!!!
உடல் வரை மட்டும்
காதல் வந்து போனது
பணம் மட்டும் வாழ்க்கையென்று
சொல்லி கருகிப்போனது
உயர் வழியில்லையென்று
தாழ்ந்துபோனது…
சதைகொண்ட
பிண்டமாக
அழிகிப்போனது…!!!
கிழக்கில் சூரியனாய்
நீ வந்தபோது
மனமிங்கு உருகொண்டது
மாறாத காதலொன்று
நீ தந்தபோது
மனமிங்கு உனை கொண்டாடிட
உயிர் வரை அன்பே நீயே
உறவாகி கிடக்கின்றாய்…!!!
-பிசாசு
No comments:
Post a Comment