Thursday, May 18, 2017

உயிர் வரை நீ

உறவாடிட 
உறவுகள் இல்லை
உரிமைகொண்டிட 

மனமில்லை
உனக்காக நானிங்கு 

உயிர்கொண்டேன்
என்று நீ வந்து சொல்ல
நொந்துபோன மனமொன்று
தளிர்விட்ட மரமானது 

உன்னால்….!!!

உடல் வரை மட்டும் 

காதல் வந்து போனது
பணம் மட்டும் வாழ்க்கையென்று
சொல்லி கருகிப்போனது
உயர் வழியில்லையென்று
தாழ்ந்துபோனது…
சதைகொண்ட 

பிண்டமாக
அழிகிப்போனது…!!!

கிழக்கில் சூரியனாய் 

நீ வந்தபோது
மனமிங்கு உருகொண்டது
மாறாத காதலொன்று 

நீ தந்தபோது
மனமிங்கு உனை கொண்டாடிட
உயிர் வரை அன்பே நீயே
உறவாகி கிடக்கின்றாய்…!!!

-பிசாசு

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...