விபரீதம் தெரியாது
காதல் தரையில் விழுந்து
சுக்கு நூறாய்
உடைந்தே போனது
இதயம்..!!!
செடிகளை வெட்டி
அழகுபார்க்கும் பாவை நீ
பூக்களை கொய்து
ஆசை தீர்க்கும் பேதையும் நீ
உறவை எரித்து திருநீறு பூசும்
அகோராதிபதியும் நீ
காதலை ஒடித்து வைத்து
புன்னகைக்கும் பைத்தியகாரியும் நீ
என்றறியாது
ஓர் காதல் கொண்டேன் …!!!
தீயறிந்தும் தீண்டும்
விட்டில் பூச்சாய்
உனை தேடிவர சுட்டெரிக்கின்றாயடி
எனையும்
எட்டிவைத்து பார்கின்றாயடி…!!!
வலிகளோடு
வாழ்ந்திடவும் முடிந்ததடி
என் காதல் ஒத்தடமிட்டு
எனக்காக தாலாட்டுபாடி
ஆறுதலாய் அணைத்து
சொல்கின்றது -உன்
அடிமை சங்கிலியில்
விடுபடா உன் நினைவை
மட்டும்கொண்டு
எனை ஆட்சிசெய்கிறது…!!!
-பிசாசு-
"நிஜங்களின் நிழல்களில் ஒட்டிக்கொண்ட கறும்மை எடுத்து இரவுகளில் கண்விழித்து கதறிதிரியும் பிசாசுவின் பிதற்றல்கள் இந்த கவிதைகள்" -பாலகிருஷ்ணன் சந்ரு-
Subscribe to:
Post Comments (Atom)
நீ
மனதை உருக்கி மாயங்கள் செய்யும் மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து ஆழம் பார்க்கும் மோசக்காரியும் நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...

-
எதை இழந்து தேடினாலும் நீயே கிடைக்க பெறுகிறாய் எது தொலைந்து போனாலும் உன்னாலேயே களவாடப்படுகிறது எவை மறக்கப்படுகிறதோ அவைள் அணைத்...
-
மூச்சுக்கு முன்னூறுதடவை என் பெயர் உச்சரித்தவள் இன்று ஒரு பேச்சுக்கு கூட என் பெயர்க்கொண்டு அழைக்க மறுக்கின்றாள் என்னை மறந்துபோன என் காதலை ம...
-
நீ இல்லாத நாட்கள் வாசமில்லா பூக்களாய் என் நந்தவனம்..!!! வெளிச்சமற்ற விண்மீன்களின் ஊர்வலமாய் எந்தன் வானம்..!!! நீ இல்லாத நாட்கள் உறங்காத கண்...
No comments:
Post a Comment